கவிதை - நிசப்த காலை கொட்டும் மழை - ரம்யா
நிசப்த காலை
கொட்டும் மழை
சொட்ட சொட்ட நனைந்த மரம்
உடல் சில்லிட மனம் இரக்கை விரிக்க
பழைய நினைவுகளில் நனைந்தது உள்ளம்
மொட்டை மாடியில்
பாட்டி வீட்டு முற்றத்தில்
மாமன் வீட்டு வாசலில்
அத்தை வீட்டு தோட்டத்தில்
விதவிதமாய் இரசித்திருக்கிறேன்
வீட்டில் இருந்த காகிதமெல்லாம்
கப்பலாய் மிதக்கும் அந்த நீரிலே
உள்ளங்கால்கள் சில்லிடும்
உயிர் வரை இன்பம் சுடும்
முத்தாய்ப்பாய் அட்சதை தூவும் அந்த அழுத மேகம்
உச்சிமண்டையில் பொத் பொத் என விழும் தூரலாய்