கவிதை - என் கள்வன் நீ.. - சந்யோகிதா
தொலைதூர பசுமை நீ
ஏக்கம் தரும் பகல் நிலவு நீ
கையில் சேரா கனவு நீ
கண்ணில் கோர்க்கும் நீர் நீ
என் நெஞ்சம் திருடி
எட்டா தொலைவில்
மறைந்த கள்வன் நீ
ஏககாலமும் என் எண்ணம் நீ
வார்த்தை கூற வழியில்லை
வசந்தமாய் நீ என் வாழ்வில் வர
வஞ்சிக்க நெஞ்சமில்லை
வா என்று மன்றாடுகிறேன்
காந்தமாய் என் மனதை கொள்ளையடித்து
கள்வா நீ அங்கு மறைந்ததேனோ..!
என் காத்திருப்புகளும்
கனவுகளும் உன் கைவசத்தில்
உன் சுவாசம் என் உயிராக
உன் பார்வை என் வழியாக
உன் சொல் என் கவியாக
என் அன்புக்கடல் நீயாக
ஆரவாரமின்றி அமைதியில்
அருட்தவம் புரிகிறேன் நான்..!