கவிதை - அவள் - குணா
பட்டாம்பூச்சி தேசத்தின் தேவதை
மின்மினிகள் அவளுடன் ஏதோ
உரையாடி செல்லும்...
கட்டெறும்பும் சிற்றெறும்பும்
அவள் கால் நகம் தேடி வரும் ...
இலையுதிர் கால இலைகளெல்லாம்
அவள் கூந்தலில் ஆசி பெரும் ...
வர்ணக்கலவைகளெல்லாம்
அவள் மருதாணி நிறம் முன்
சற்று மங்களாகவே தெரியும் ...
இப்படி கனவு முடிந்தது
நேற்று இரவின் கற்பும் தொலைந்தது ..
ஆனால் அவளிட்ட
முத்தத்தின் ஈரம் மட்டும்
இன்னும் ஏனோ முணுமுணுத்துக்கொண்டே
இன்றைய இரவின் வாயிலைத் தேடுகிறது ...