கவிதை - என் இனிய மகளே... - விஜி P
அன்னையாக்கி அழகு பார்த்தவள் நீ
மழலை மொழியில் மனதை மயக்கியவள் நீ
பள்ளிப் பாடங்களில் படிப்பாளி ஆக்கியவள் நீ
குடிசையாய் இருந்த என் வீட்டை கோவில் ஆக்கியவள் நீ .
யாருமற்ற எனக்கு யாதுமாகி நின்றவள் நீ.
உன் அன்பினால் எனக்கு அன்னையானவள் நீ...!
{kunena_discuss:779}