(Reading time: 2 - 3 minutes)

கவிதை - உன்னில் பாதி  நான் - ப்ரீத்தி

half

உண்ண மறந்தேன் ஆடை

உடுக்க மறந்தேன்-கண் இமை மூடாமல்

உறங்க மறந்தேன்

 

உன்னில் என்னை தொலைத்துவிட்டு -செய்வதறியாது

உறைந்து நிற்கிறேன் - ஆமாம்?

உனக்கும் எனக்கும் என்ன உறவு? - நிச்சயம்

உன்னதமானதாகத்தான் இருக்கும்.

 

நான் இஷ்டப்பட்டுத்தான்  இருத்தேன் -உன்

இஷ்டமானவளாக - ஏனோ

உன் நினைவு அவ்வபோது வந்து என்னை

கட்டிபோடுகிறது

 

சொல்லி புரியவைக்க முடியுமா

அலைபாயும் மனதுக்கு

ஐந்தாறு திங்கள் பொறுத்திரு என் மனமே - உன் சிந்தையை

ஆட்கொண்டவன் ஆகாயத்தில் பறத்துவருவன் -

 உன் கலி போக்க என்று!!!!

 

அறுவது வயதை தாண்டினாலும் - நீ

ஆரத்தழுவும் போது

அத்தனையும் மறந்து போகும் - உன் வயதும் கூட

 

மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்  -

உனக்கும் எனக்கும்

உன்னில் பாதி  நான் - ஆம்

என் வயது உங்களின் அனுபவம் - ஆமாம்?

எப்படி ஆட்கொண்டாய் என்னை? -

புரியாத புதிராகவே இருக்கின்றது இன்னும்.

 

என் நாடி நரம்புகளின் மூலம் செல்களில்

பாய்ந்தோடும் குருதியில் கலந்து - என்

மார்பு  கூட்டுக்குள் மையம் கொண்ட புயலாய் - என்

எண்ண சிதறல்களில் நிலை கொண்டாய்.

 

ராமனின் கால் பட்டதும்  கல்லும் பெண்ணானது போல்

துஷ்யந்தனின் கை பட்ட மோதிரத்தால்

சகுந்தலையின் வாழ்வில் ஒளி பெற்றது போல்

உன் கை பட்டு எனக்குள் இருந்த - நீ

சட்டன வெளிப்பட்டு - என்னில்

சதுரங்கம் ஆடுகிறாய்.

 

காத்து இருக்கிறேன் - உன்

கைகளுக்குள் தஞ்சம் புகுந்து

தவிக்கின்ற மனதுக்கு மருந்தாக - நீ

கொடுக்கும் முத்தத்திற்காக!!!!!!! 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.