கவிதை - உன்னில் பாதி நான் - ப்ரீத்தி
உண்ண மறந்தேன் ஆடை
உடுக்க மறந்தேன்-கண் இமை மூடாமல்
உறங்க மறந்தேன்
உன்னில் என்னை தொலைத்துவிட்டு -செய்வதறியாது
உறைந்து நிற்கிறேன் - ஆமாம்?
உனக்கும் எனக்கும் என்ன உறவு? - நிச்சயம்
உன்னதமானதாகத்தான் இருக்கும்.
நான் இஷ்டப்பட்டுத்தான் இருத்தேன் -உன்
இஷ்டமானவளாக - ஏனோ
உன் நினைவு அவ்வபோது வந்து என்னை
கட்டிபோடுகிறது
சொல்லி புரியவைக்க முடியுமா
அலைபாயும் மனதுக்கு
ஐந்தாறு திங்கள் பொறுத்திரு என் மனமே - உன் சிந்தையை
ஆட்கொண்டவன் ஆகாயத்தில் பறத்துவருவன் -
உன் கலி போக்க என்று!!!!
அறுவது வயதை தாண்டினாலும் - நீ
ஆரத்தழுவும் போது
அத்தனையும் மறந்து போகும் - உன் வயதும் கூட
மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் -
உனக்கும் எனக்கும்
உன்னில் பாதி நான் - ஆம்
என் வயது உங்களின் அனுபவம் - ஆமாம்?
எப்படி ஆட்கொண்டாய் என்னை? -
புரியாத புதிராகவே இருக்கின்றது இன்னும்.
என் நாடி நரம்புகளின் மூலம் செல்களில்
பாய்ந்தோடும் குருதியில் கலந்து - என்
மார்பு கூட்டுக்குள் மையம் கொண்ட புயலாய் - என்
எண்ண சிதறல்களில் நிலை கொண்டாய்.
ராமனின் கால் பட்டதும் கல்லும் பெண்ணானது போல்
துஷ்யந்தனின் கை பட்ட மோதிரத்தால்
சகுந்தலையின் வாழ்வில் ஒளி பெற்றது போல்
உன் கை பட்டு எனக்குள் இருந்த - நீ
சட்டன வெளிப்பட்டு - என்னில்
சதுரங்கம் ஆடுகிறாய்.
காத்து இருக்கிறேன் - உன்
கைகளுக்குள் தஞ்சம் புகுந்து
தவிக்கின்ற மனதுக்கு மருந்தாக - நீ
கொடுக்கும் முத்தத்திற்காக!!!!!!!
{kunena_discuss:779}