கவிதை - குழந்தை என்ற கடவுள் - விஜி P
கண் விழித்தும் எழாமல் இருந்தேன் கனவின் ஸ்பரிசம் போய்விடுமென்பதால்..
அடிமனதின் ஆசைகள்தான் கனவாமே,
அடிமனதிலும் எட்டாத கற்பனையின் உச்சம் என் ஆள்மனதிலே நுழைந்த வழியோ என் அறிவையும் தாண்டி..
இரு ஜாமம் தாண்டி வருவது உண்மைக் கனவாம்,
ஜாமம் முடிந்தும் கண்களை மூடி கட்டிலில் புரண்டு கொண்டு கனவின் நினைவுகளை மீட்டி மீட்டி
மாயை இன்பத்தை இதயத்தில் தடவி காண்கிறேன்..
இந் நொடியிலே இன்னுமோர் பகல் கனவு.
{kunena_discuss:779}