கவிதை - முகத்தோடு... - கலைச்செல்வி அறிவழகன்
கனவுகளின் முகப்பினில்
உன் முகத்தோடு
என் முகம் தழுவிட
இளமையின் தூண்டுதலில்
சட்டென்று நான் முத்தமிட
சத்தமின்றி சில நொடிகளும்
வெட்கத்துடன் துடித்திட
மறுமுறையும் உன் சுவை தேடியே
காத்திருக்கும் மலர் போன்ற
என் இதழ்களுக்கு
மீண்டும் மீண்டும்
விடுமுறையில்லாத நாளானது.