கவிதை - மண் - வாசு
மகத்துவங்கள் பல உள்ளடக்கிய
மனிதன் தோன்றும் முன் தோன்றினாலும்,
மௌனமாக நீ இருந்து
மாற்றங்கள் தருகிறாயே!
ஜனித்துவிட்ட உயிர்க்கெல்லாம்
வாழ்வதற்கு ஆதாரமாகி
மடிந்த பின்பு - உன்
மார்போடு
சேர்த்தனைக்கிறாயே!
யுத்தம் பல தோன்றிஇங்கு
குருதி ஆறு ஓடினாலும்
வளம் கொழிக்கும் வளமான ஆறு ஓடினாலும்
சமமாக பாவிக்கும்- உன்
மனதைக் கண்டு வியந்தேன்
மனம் கவரும் -பூ வாசமும் உன் மண்வாசத்திற்கு ஈடாகுமா!