(Reading time: 1 - 2 minutes)

கவிதை - மண் - வாசு

ground

மகத்துவங்கள் பல உள்ளடக்கிய 
மனிதன் தோன்றும் முன் தோன்றினாலும்,
மௌனமாக நீ இருந்து
மாற்றங்கள் தருகிறாயே! 

ஜனித்துவிட்ட உயிர்க்கெல்லாம்
வாழ்வதற்கு ஆதாரமாகி
மடிந்த பின்பு - உன்
மார்போடு 
சேர்த்தனைக்கிறாயே! 

யுத்தம் பல தோன்றிஇங்கு
குருதி ஆறு ஓடினாலும்
வளம் கொழிக்கும் வளமான  ஆறு  ஓடினாலும் 
சமமாக  பாவிக்கும்- உன் 
மனதைக் கண்டு வியந்தேன்

மனம் கவரும் -பூ வாசமும்  உன் மண்வாசத்திற்கு ஈடாகுமா!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.