கவிதை - அலைபேசி - ஜெப மலர்
நேரத்தை களவு கொள்வதும் இல்லை...
நேரம் செலவிடுவதே இல்லை என கோபிப்பதும் இல்லை...
தேடி செல்லும் போது ஆறுதல் அளிக்க மறக்கவும் இல்லை..
தேடி வரும் போது ஒதுக்கினாலும் வாடி நிற்பதும் இல்லை...
மன விருப்பம் அறிந்து விடையாய் நிற்பதில் உனக்கு நிகர் நீயே...
மனம் அழுத்தம் தீர்க்கும் மாமருந்தும் நீயே..
வெற்றியும் தோல்வியும் உனக்குள்ளே அடக்கியிருக்கிறது...
வெற்றியை தேடி கொள்வதும்
தோல்வியில் அழிந்து போவதும்
பயன்படுதுவோர் கையிலே உள்ளது...
அல்லல் நீக்கும் அலைபேசியே