கவிதை - வளர்ச்சி எங்கே - ஜெப மலர்
வளர்ச்சி வளர்ச்சி என்று கூவி
கூறு போட்டு அழித்து
வளர்ச்சி என்பதை வளரவிடாமல்
விதை நசுங்க செய்கிறதடா இந்த பாதக உலகம்...
எண்ணில்லா வளங்களை இறைவன்
எண்ணிப் பார்க்காமல் கொடுத்ததற்கு
எண்ணி எண்ணி பார்த்து விற்று
ஏழ்மையை விலை கொடுத்து வாங்குதடா இந்த ஜென்மம்...
காப்பவன் கருத்தாய் கடமையை செய்து
வயிற்று பிழைப்புக்கு ஆதாரம் அளிக்க
கொடுத்த இறைவனை வீதியில் நிறுத்தி
எடை போட்டு பேரம் பேசி
விற்று விட துணிந்து விட்டதடா இந்த ஞாலம்...
வளர்ச்சி பாதையில் வையகம்
செல்கிறது என வேடிக்கை பேசும் மானிடர்
உறவுகளுக்கிடையே வளர்ச்சிகள்
வடிந்து வறண்ட நிலையில் இருப்பதை
அறிந்து கொள்ளவா போகிறது...