(Reading time: 1 - 2 minutes)

கவிதை - உணராத வலி - ஜெப மலர்

பிரம்படியின் வலியையும்

சொல்லடியின் வலியையும் 

பிரிவு தரும் வலியையும் 

ஏமாற்றத்தின் வலியையும் 

துரோகம் இழைக்கும் வலியையும் 

துன்பத்தினால் வலியையும் 

காயத்தின் வலியையும் 

மனக்காயத்தின் வலியையும் 

இழப்பின் வலியையும்.... 

இத்தனை இத்தனை விதமாய்

இன்னும் எத்தனையோ வலியை உணர்ந்தாலும்.... 

இதே போல தான் 

மற்றவருக்கும் வலிக்கும் 

என்ற வலியை உணராததாலே

வலி இங்கே நிரந்தரமாகி விட்டது... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.