கவிதை - பெண்ணியம் - கார்திகா.ஜெ
ஏன் இந்த மயக்கம்
ஏன் இந்த தயக்கம்
கார்மேகம் கொண்ட உன் குழல் கண்டு தொலைந்ததோ
எத்தனை அழகு எத்தனை விந்தை
கொடியிடை கொண்ட நங்கையில்
மாதுயின்றி உருவகம் உண்டோ?
மனிதியின்றி உருவாக்கம் உண்டோ?
என்னென்று சொல்வேன் பெண்ணியத்தை
ரௌத்தரம் பழகும் கோதையை
கோட்பாடுகள் நிறைந்த நாட்டில்
உயிரற்ற பிம்பத்தை சிதைத்து
சாய்கும் மிருகம் மனிதன் அல்ல
எரியும் தழல்லிருந்து உயிர்தெழு மங்கையே....