கவிதை - பறக்கனுமே... - நிஷாந்த்
எட்டா உயரத்தில் றெக்க கட்டி
பறக்க துடிக்கும் மானிடனே...
தகுதி உள்ளதா ஆராய்ந்து பார்
இல்லை பறக்கும் போது வீழ்ந்திடுவாய்
வர்ணஜாலமிட்டு வலம் வரும்
வண்ணத்துப்பூச்சி
கூட்டுபுழுவாய் அடங்கியிருக்கும் ஒருகாலம்
நீயும் அடங்கியி்ருந்து கற்று கொள்
நிகரில்லா அழகோடு உயர்ந்திடுவாய்
வெகுவிரைவில்...