(Reading time: 1 - 2 minutes)

கவிதை - காதல் - இந்துமதி

எத்துனை தொலைவில் இருந்தாலும்

இதயங்கள் இரண்டு பேசிக் கொள்ளும் உணர்வு....

எத்துனை நெருக்கமாய் இருந்தாலும்

வார்த்தைகள் இன்றி தவிக்கும் உணர்வு....

எத்துனை ஊடல்கள் வந்தாலும்

அதிலும் சுகம் கொடுக்கும் உணர்வு...

எத்துனை சொந்தங்கள் அருகில் இருந்தாலும்

தன் மனம் கவர்ந்தவரைத் தேடும் உணர்வு....

யாருடனும் ஒப்பிடாத பெற்றோரைக் கூட

பெற்றவரா?? இல்லை மனதில் சுமப்பவரா?? என யோசிக்க வைக்கும் உணர்வு...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.