கவிதை - ஏ கடிதமே! ஏ கடிதமே! - ரஹீம்
உன் முகம் பாராது ஏங்கிய நாட்கள் உண்டு
உன் முகம் பார்த்து மகிழ்ந்த நாட்கள் உண்டு
உன் முகம் பார்த்து மயங்கிய நாட்கள் உண்டு
உன் முகம் பார்த்து பயந்த நாட்கள் உண்டு
உன் முகம் பார்த்து அழுத நாட்கள் உண்டு
பலரின் சுகம் துக்கம் தங்கி வரும் ஏ கடிதமே
ஏ கடிதமே! ஏ கடிதமே!