கவிதை - வெற்றி - செல்வா சுதர்சன்
தோல்விகள் எல்லாம் தூண்டுகோலாய் இருக்க..
தன்னம்பிக்கை நமக்கு உறுதுணையாய் நிற்க...
பட்ட துயரமெல்லாம் அனுபவங்கள் கொடுக்க...
வெறுத்தவர் எல்லாம் வியப்புற்று பார்க்க...
இகழ்ச்சிகள் எல்லாம் உரமாய் வளர்க்க...
முயற்சி ஒன்றையே முழுதுமாய் ஏற்க..
தடைகளை உடைத்து சரித்திரம் படைக்க..
வெற்றியை பெறுவோம் அங்கீகாரம் கிடைக்க...