காதல் தலைவா - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்
கண்களில் நீ சொன்ன
வார்த்தைகளை நான்
கவிதையாக்கிக் கொண்டேன்
கனவுகளில் நீ தந்த
வர்ணங்களில் தான்
என் வாசல் கோலமிட்டேன்
காரணமற்ற உன்
செய்களில் தான்
வாழ்வின் பூரணம்
உணர்ந்தேன்
காமத்தோடு நீ வந்த
தருணங்களை நான்
காதலாக்கிக்கொண்டேன்
காதலோடு நீ தந்தவற்றை
நம் இல்லறத்தின்
நல்லறமாக்கிக்கொண்டேன்
புனைவுகளில்லா உன்
புகழாரங்களில் என்
புன்னகை பெருக்கிக்கொண்டேன்
தலைவா,
இளமையின் மலர்களை
உன் தோளில் மாலையாக்கினேன்!
காதலுடன் நீ தரும்
விந்தனை
கருவாக்க விழைகிறேன்
அந்த சின்னஞ்சிறு
கனவுகளில் தான்
நம் காதல் பிறை வளர்க்கிறேன்
அன்பே அது
தேயாவண்ணம்
நம் ஒழுக்கத்தை
காவலாக்கினேன்.
திருப்பங்களறியா மணவாழ்வை
உன் விரல் பற்றி கடக்க
விழைகிறேன்,
விதியின் வழியில்
ஏதேனும் பிரிவு
வருமெனில் ,
இணைந்தே மறையும்
வரத்தைக்கோருவேன்
மீறி பிரிய நேர்ந்தால்
நிச்சயம்
உன் வருங்காலமாய்
நனே இருப்பேன்.
{kunena_discuss:779}