(Reading time: 1 - 2 minutes)

காதல் தலைவா - முத்துலெட்சுமி சுப்பிரமணியன் 

Couple

கண்களில் நீ சொன்ன
வார்த்தைகளை நான் 
கவிதையாக்கிக் கொண்டேன்

கனவுகளில் நீ தந்த
வர்ணங்களில் தான்
என் வாசல் கோலமிட்டேன்

காரணமற்ற உன்
செய்களில் தான்
வாழ்வின் பூரணம்
உணர்ந்தேன் 

காமத்தோடு நீ வந்த
தருணங்களை நான்
காதலாக்கிக்கொண்டேன்

காதலோடு நீ தந்தவற்றை
நம் இல்லறத்தின்
நல்லறமாக்கிக்கொண்டேன்

புனைவுகளில்லா உன்
புகழாரங்களில் என் 
புன்னகை பெருக்கிக்கொண்டேன்

தலைவா,

இளமையின் மலர்களை
உன் தோளில் மாலையாக்கினேன்!

காதலுடன் நீ தரும்
விந்தனை
கருவாக்க விழைகிறேன்

அந்த சின்னஞ்சிறு 
கனவுகளில் தான்
நம் காதல் பிறை வளர்க்கிறேன்

அன்பே அது
தேயாவண்ணம் 
நம் ஒழுக்கத்தை
காவலாக்கினேன்.

திருப்பங்களறியா மணவாழ்வை
உன் விரல் பற்றி கடக்க
விழைகிறேன்,

விதியின் வழியில்
ஏதேனும் பிரிவு 
வருமெனில் ,
இணைந்தே மறையும்
வரத்தைக்கோருவேன்

மீறி பிரிய நேர்ந்தால்
நிச்சயம் 
உன் வருங்காலமாய்
நனே இருப்பேன்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.