(Reading time: 14 - 27 minutes)

அண்ணனும் தம்பியும்.

டேய் நக்ஷ் அவளுக்கு ஒரு பால் வேனும்டா நீ பாத்துக்ரியா நான் போய் வாங்கிட்டு வரேன் என்றான் ஈஷ்வர். அண்ணா நீ இங்கயே அண்ணியோடவே இரு நான் வரேன் என்று கிளம்பினான் நக்ஷ்.

அமைதியாக அவள் கண்ணில் தெரியும் படியாக ஒரு பக்கவாட்டு சேரில் அமர்ந்தான் ஈஷ்வர். அமர்ந்து இருந்தவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தபடியே இருந்தது. அவள் அழுகிறாள் என்பதே மனதை வலிக்கச் செய்ய ஒரே எட்டில் அவள் அருகில் அமர்ந்தான் ஈஷவர். அவள் அமர்ந்து இருப்பது தாத்தாவின் அறை இடது புரம்முல்ல சிறிய பென்சில். அதைச் சுலபமாக பார்பது கடினம் தான். இவள் பக்கத்தில் அமர்ந்தவன் எதையுமே கேட்காமல் அழும் குழந்தையை கொஞ்சும் தோணியில் என்னடா குட்டிமா, பட்டுமா , புஜ்ஜிமா  என்று அவளை தன் மேல்  சாய்த்து தட்டிக் கொடுத்தான். அவள் அழுகை தேம்பல் மோடிர்கு போய் சற்று சத்தமாக வெலியே வரச் சற்று பதட்மடைந்தான் அவள்லவன். அவள் அழுகை நின்றதாக இல்லை. அதற்குள் இவர்களின் அருகே வந்த ஒரு செவிலியர் ஈஷ்வரிடம் ஒரு அறைப்பக்கம் கை நீட்டி மேடம்ம கூட்டிட்டு உள்ள போய்டுங்கள் சார் என்றார்.

நன்றி சிஸ்டர் என்றவன், அவளையும் எழுப்பி அந்த அறைப்பக்கம் நடத்திச் சென்றான்.  செவிலியர் காட்டிய அறை ஒரு விட்டில் உள்ள படுக்கை அற்றைப்போல் எல்லாச் சலுகையுடனும் இருந்தது. அவள் உள்ளே அவனுடன் வந்த அடுத்த நொடி கதவைச் சாத்திவிட்டு காற்று கூட புகவழியில்லாம் அப்படி ஒரு இருக்கம் அவன் அணைப்பில். இவள் மன இருக்கம் அங்கு அதன் பின் ஏன் நின்றதாம். ஓடியே சென்று விட்டது. தாத்தாவின் உடல்நிலையால் அவள் அழுகிறாள் என்று ஆறுதலாகத் துடங்கிய அணைப்பு அவள் மனதின் இருக்கம் தொலைந்து அவளும் அவனை அணைக்க காதல் கவி பாட ஆரம்பித்தது மனது. அவளின் முகத்தை நிமிர்த்திப் பார்த்தால், வேதனைப் போய் வெட்கம் அல்லவா குடிபுகுந்துள்ளது.

அவன் முகத்தைக் காண ஆசை இருந்தும் வெட்கம் பிடுங்கித் தின்ன அவன் மார்பினிலே தஞ்சம் ஆனாள் அவன்னவள். இதற்குமேல் பொறுக்க முடியாது என்று அவள் முகத்தைக் கையில் ஏந்தி அழுத்தமான முத்திரையை அவள் இதழில் பதித்தான் ஈஷ்வர். எவ்லோ நேரம் தான் இதையெல்லாம் வாசல்லந்து வேடிக்கை பார்ப்பது. அண்ணா என்று குரல் எழுப்பினான் தம்பி அவன். ஏதோ விண்ணுலகில் பயணம் செய்த இருவரும் இவன் குரலால் மண்ணுலகை தட்டித் தடுமாறி அடைய அவனிடம் இருந்து துள்ளி ஓடினாள் பெண்னவள். ஏய்... நில்லு டி, பார்த்து டி விழுந்துட போர என்று ஈஷ்வர் குரல் எல்லாம் அவளை அண்டவே இல்லையே.

2 comments

  • :clap: haha annan thambikitta maattikkittaare? :grin: nice epi.ungalukku big :thnkx: 4 quick update koduthrhatharku. (y) :thnkx: :thnkx: eagarly waiting 4 next epi.seekkiram mudinthathu poliruku. :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.