நாம் ஏதேனும் புதுப்பொருட்கள், செப்பல்கள், டிரஸ், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இவையெல்லாம் வாங்கினால் அதனுள் சின்னதா ஒரு பாக்கெட் வைத்து இருப்பார்கள். அது தான் சிலிக்கா பாக்கெட். அதில் குழந்தைகள் கையில் படாமல் அப்புறப்படுத்தவும் என்று எழுதியிருக்கும். நாமும் அது எதற்கு என்று தெரியாமலே தூக்கி குப்பையில் போட்டு விடுவோம். இவற்றில் இருக்கும் நன்மைகளை நீங்கள் அறிந்தால் அதை கீழே போட மனசு இருக்காது. தம்மா துண்டு பாக்கெட்டுக்குள் அவ்வளவு நன்மைகள் இருக்காம் . இந்த சிலிக்கான் பாக்கெட்டுகள் ஒரு உலர்விப்பான் மாதிரி செயல்படுகிறது. பொருட்களில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி பொருட்களை எப்பொழுதும் ப்ரஷ்ஷாக வைத்து இருக்குமாம். சரி இந்த பாக்கெட்டை கொண்டு நாம் எப்படியெல்லாம் பயன் அடையலாம் வாங்க.
இந்த சிலிக்கான் பாக்கெட்டை என்றைக்காவது ஓபன் செய்து பார்த்து இருக்கிறீர்களா. இதனுள் சின்ன சின்னதாக சிலிக்கா பால்ஸ் காணப்படும். பார்பதற்கு நாம் பாயாசத்திற்கு பயன்படுத்தும் ஜவ்வரிசி மாதிரி இருக்கும். இந்த சிலிக்கான் பால்ஸ் தான் உங்க வீட்டில் உள்ள பொருட்கள், கம்பெனியில் உள்ள பொருட்கள் ஈரப்பதத்தால் பூஞ்சை படர்ந்து கெட்டுப் போகாமல் இருக்க உதவுகிறது. இந்த பாக்கெட் எலக்ட்ரானிக் பொருட்கள், தோல் பொருட்கள் , இறைச்சி, பனி மூட்டிய ஜன்னல்கள், பூக்கள் இவற்றை பாதுகாக்க பயன்படுகிறது. இதன் நன்மைகளை கீழே காண்போம்.
மொபைல் போனை உலர்த்த
நிறைய தடவை கை தவறி போனை தண்ணீரில் போட்டு விடுவோம். இல்லையென்றால் குழந்தைங்க போன்ல தண்ணீரை ஊற்றி விடும். இதுக்கு என்ன செய்வது என்றே தெரியாது. நாமும் அரிசி வாளிக்குள் வைப்போம், துடைப்போம், ஊதிவோம் ஆனால் எதுவும் வேலைக்காது. ஈரமான உங்க போனில் உள்ள நீரை உறிஞ்ச இந்த சிலிக்கா பாக்கெட் இருந்தா போதும். ஈரமான போன், ஹெட் போன் இப்படி எதாக இருந்தாலும் சரி அதை ஒரு ஷிப் லாக் கவரில் போட்டு உடன் சிலிக்கா ஜெல் பாக்கெட்டையும் போட்டு இறுக்கமாக மூடி விடுங்கள். 72 மணி நேரம் இப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு திறந்து பார்த்தால் உங்க மொபைல் போனில் உள்ள எல்லா ஈரப்பதத்தையும் உறிஞ்சி போனை புதுசு போல பாதிப்பிலிருந்து காப்பாற்று விடவும். பிறகு நீங்கள் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
கார் கண்ணாடி
நீங்கள் காரில் போகும் போது பொதுவாக குளிர்காலத்தில் இந்த பிரச்சினையை சந்திப்பீர்கள். அப்படியே கண்ணாடி முழுவதும் பனி படர்ந்து எதிர் வரும் வண்டி கூடத் தெரியாமல் மறைத்து விடும். நம்ம என்ன தான் வைப்பர் போட்டு க்ளீன் செய்தாலும் மறுபடியும் பனி படரும். இதுக்கு இருக்கவே இருக்கு ஒரு சிம்பிள் ஐடியா. சிலிக்கா பேக்கை எடுத்து கண்ணாடி ஜன்னலுக்கு அருகில் போட்டு விடுங்கள். ஈரப்பதத்தை முழுவதும் உறிஞ்சி தெளிவாக கண்ணாடியை ஆக்கி விடும். இதற்கான வாட்டர் சர்வீஸ் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய தேவை எதுவும் இருக்காது.
போட்டோக்களை பராமரிக்க
பழைய காலத்து போட்டோக்களை எல்லாம் பீரேம் போடாமல் அப்படியே மேலே போட்டு வைத்திருப்போம். ரெம்ப நாள் கழிச்சு எடுத்து பார்க்கும் போது பூஞ்சை படிந்து போட்டோக்கள் நாசமாகி விட வாய்ப்புள்ளது. எனவே இந்த போட்டோக்களை ஒரு கவரில் போட்டு அதனுடன் சிலிக்கா ஜெல் பாக்கெட்டை போட்டு வைத்தாலே போதும் போட்டோக்கள் புதிது போல் தோற்றமளிக்கும்.
முக்கியமான சர்டிஃபிகேட்கள், புத்தகங்களை பராமரிக்க
நாம படிச்ச சான்றிதழ், குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், சொத்து சான்றிதழ், புத்தகங்கள் இவைகள் மழைக்காலத்தில் ஈரப்பதம் பட்டு பூஞ்சை படர்ந்து பாழாக வாய்ப்புள்ளது. அதை பாதுகாக்க சான்றிதழ் இருக்கும் பைலில் சிலிக்கா ஜெல்லை போட்டு வைக்கலாம். உங்க சான்றிதழ்கள் பத்திரமாக இருக்கும்.
உணவுகளை பதப்படுத்த
பொதுவாக விதைகள், சில மசாலா பொருட்கள், மூலிகைகள் இவற்றை உலர்ந்த இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டியிருக்கும். அதே மாதிரி வளர்ப்பு பிராணிகளின் உணவுகள் இவற்றை பாதுகாப்பாக வைக்க வேண்டியிருக்கும். இவற்றில் ஈரப்பதம் பட்டால் கெட்டி விடும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க இந்த உணவுப் பொருட்கள் உள்ள டப்பாக்களில் சிலிக்கா பேக்கை போட்டு மூடி வைக்கலாம். பூஞ்சை படர்வதை தடுத்து எப்பொழுதும் ப்ரஷ்ஷாக இருக்கும்.
பிஸ்கெட், கேக்குகள் போன்ற மனிதர்கள் சாப்பிடும் பொருள்களுக்குள் நேரடியாக இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகளைப் போட்டு வைக்காதீர்கள். அது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும்.
சுத்தமாக வைத்திருக்க
குளிர்காலத்தில் நாம் பயன்படுத்தும் பெட்ஷீட், தலையணை, துணிகள் இவற்றில் பூஞ்சை படர்ந்து வாடை அடிக்கும். எனவே அந்த இடங்களில் சிலிக்கா பேக்கை போட்டு வைக்கலாம். உங்க ஜிம் பேக், பீரோ, செப்பல்கள் உள்ள அலமாரி இப்படி எல்லா இடங்களிலும் ஈரப்பதத்தை உறிஞ்ச சிலிக்கா பைகள் தேவைப்படுகின்றன. ஷூக்கள் மற்றும் சாக்ஸில் உள்ள பாக்டீரியாக்களை விரட்டி துர்நாற்றத்தை விரட்டுகிறது.
எந்த துர்நாற்றத்தையும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த சாக்ஸில் இருந்து வரும் துர்நாற்றத்தைத் தாங்கிக் கொள்வதென்பது முடியவே முடியாத காரியமாக இருக்கும். அவற்றிலிருந்து மீள்வதற்கு இந்த சிலிக்கான் ஜெல் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
இரும்பு பொருட்கள் துருப்பிடித்தலை தவிர்க்க
சிலநேரங்களில் நாம் தினமும் பயன்படுத்தும் பிளேடுகள், ஸ்க்ரூடிரைவர்கள், கழுவிய பாத்திரங்கள், கத்திகள் இவற்றில் நீர் தங்கும் போது துருப்பிடிக்க ஆரம்பித்து விடும். இதனால் வாங்கி சில நாட்களிலேயே மழுங்கிப் போய் அதை தூக்கி போடும் நிலை வரும். எனவே கத்திகள், பிளேடுகள் போட்டுருக்கும் டப்பாவில் சிலிக்கா பேக் போட்டு விடுங்கள். கத்திகள் துருப்பிடிக்காமல் நீண்ட காலம் வரும்.
எந்தெந்த பொருள்கள் துருப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது என்று நினைக்கிறீர்களோ அதில் இந்த பாக்கெட் ஒன்றைப் போட்டு விடுங்கள். குறிப்பாக, இரும்பு பீரோ வீட்டில் பயன்படுத்துபவர்கள் பிரோவுக்குள் ஆங்காங்கே சில சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகளைப் போட்டு வையுங்கள்.
மலர்களை ப்ரஷ்ஷாக வைக்க
அரிய வகை பூக்களை சில நேரம் பாதுகாக்க வேண்டியிருக்கும். எனவே அப்படிப்பட்ட மலர்களை பாதுகாக்க ஒரு கண்ணாடி ஜாரில் சிலிக்கா ஜெல்லை போட்டு இறுக்கமாக மூடி விடுங்கள். 2-6 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். இது மலர்களை உலர்த்தி பாதுகாப்பாக வைத்திருக்கும்.
பூக்கள் வாடி விடாமலும் அழுகிவிடாமலும் இருக்க நம் ஆட்கள் செய்யும் பாதுகாப்பு நிறைய. ஆனால் அவை எதுவுமே தேவையில்லை. ஒரு சிலிக்கான் ஜெல் பாக்கெட் போதும்.
வீட்டில் உள்ள நாற்றங்கள் போக
நாம் தினமும் பாத்திரம் கழுவும் சிங்கிற்கு கீழே கெட்ட துர்நாற்றம் வீசும். இது உணவுப் பொருட்கள் தேங்கி நிற்பதால் உண்டாகிறது. எனவே அதை போக்க சிலிக்கா ஜெல்லை வாங்கி சிங்கிற்கு அடியில் போட்டு வையுங்கள். வீட்டில் உள்ள கெட்ட துர்நாற்றத்தை எல்லாம் விரட்டி விடும்.
நூற்றுக்கணக்கில் செலவு செய்து ரூம் ஃபிரஷ்னர் வாங்கி வீட்டில் அடித்தாலும் கூட, வெளியில் இருந்து அல்லது வீட்டுக்குள் இருந்தோ கூட வருகின்ற சில கெட்ட வாசனையை நம்மால் விரட்ட முடியவில்லை. ஆனால் நாம் குப்பையில் தூக்கி வீசுகின்ற இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகள் வீட்டில் துர்நாற்றம் வீசும் இடங்களில் போட்டு வைத்தால் போதும். கெட்ட வாசனைகள் ஓடியே போய்விடும்.
பயன்படுத்தாத ஹேன் பேக்குகள்
குறிப்பாக ஹேன் பேக், டிராவல் பேக் எல்லாவற்றையும் வெளியே செல்லும் போது தான் பயன்படுத்துவோம். மற்ற நேரங்களில் எடுக்க மாட்டோம். குளிர் அல்லது மழைக்காலத்தில் காற்றில் இருக்கும் ஈரப்பத்தத்தால் பேக்குகளில் பூஞ்சை பிடித்து வாடை அடிக்க ஆரம்பித்து விடும். பிறகு நீங்கள் எல்லா பேக்கை யும் எடுத்து துவைத்து காயப் போட வேண்டியிருக்கும். இதைத் தவிர்க்க பேக்குகளில் ஒரிரு சிலிக்கா பாக்கெட்டை போட்டு வையுங்கள். வாடையும் பிடிக்காது, பூஞ்சையும் படராது.
இப்படி போட்டு வைத்திருந்தீர்கள் என்றால், எவ்வளவு மாதங்கள் ஆனாலும் இந்த ஹேன் பேக்குகளில் இருந்து துர்நாற்றம் வராது. பூஞ்சைகள் மற்றும் பூச்சிகள் எவையும் அண்டாது.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.