(Reading time: 8 - 15 minutes)
 
எல்லோரும் சென்ற சிறிது நேரத்தில் மிதுர்வனிடம் இருந்து அழைப்பு வந்தது..
 
என்ன சைதன்யா எல்லா வேலையும் முடிந்து விட்டதா என கேட்டான்.. 
 
காலையில் தானே அவனிடம் எல்லாவற்றையும் சொன்னோம் மறுபடி கேட்கிறானே என நினைத்து காலையில் காண்பித்த வேளைகளில் மீதி நடந்து கொண்டிருக்கிறது என திரும்பவும் கேட்கிறாயே என்று குட்டாமல் குட்டினாள்.. 
 
அதனைப் புரிந்து கொண்ட அவன் பேச்சை மாற்றும் விதமாக வேலைகள் முடியவில்லை ஆனால் எல்லோரும் கதையளந்து கொண்டிருக்கிறீர்கள்.. 
 
எனக்கு வேலை நேரத்தில் வெட்டி அரட்டை இதெல்லாம் பிடிக்காது சைதன்யா இனி இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் இவன் எதை சொல்கிறான் என யோசித்து ஓ சந்துவோடு  பேசிக்கொண்டிருந்ததை  சொல்கிறானோ..
 
எல்லாரும் தானே பேசிக் கொண்டிருந்தோம் என்னை மட்டும் சொல்கிறானே சும்மா இருக்கிறேன் என சொல்லாமல் சொல்கிறானா ஆனாலும் வெட்டி அரட்டை என எப்படி சொல்லலாம் வேலையை பற்றி தானே பேசிக்கொண்டிருந்தோம் என்ற ஆத்திரத்தில் வேலைகள் கொடுத்தால் தானே சார் செய்ய முடியும்.. 
 
உங்கள் வீட்டு பூஜையில் உங்கள் உறவினர்களின் உடைகளை அளவெடுத்து அதன் பிறகுதான் அதை தைக்க ஆரம்பிக்க வேண்டும் அதுவரையில் சும்மா இருக்க வேண்டாம் என விழா சம்பந்தப்பட்ட வேலைகளை செய்கிறோம் அப்படியும்  மிச்சமிருக்கும் நேரத்தில்  எங்கள் பொட்டிக் வேலைகளை செய்கிறோம்.. 
 
உங்கள் பழைய டிசைனர்கள் அவர்களின் கீழ் வேலை செய்பவர்களும் இரவு 7 மணி வரை கூட வேலை செய்கிறார்கள்.. எங்களுக்கு நீங்கள் இன்னும் எந்த வேலையும் கொடுக்கவில்லை வேலை செய்யவில்லை என்றும் திட்டுகிறீர்கள்..
 
இப்போது எனக்கு தோன்ற துவங்கிவிட்டது சார் நீங்கள் எனக்கு நிரஞ்சனா மேடம் சிபாரிசால் தான் இந்த வேலையை கொடுத்திருப்பீர்களோ என அதனால் தான் என்னிடம் உங்கள் வேலைகளைக் கொடுக்க யோசிக்கிறீர்களோ என தோன்றுகிறது மூச்சுவாங்க நீளமாக பேசி முடித்தாள்..
 
 
அவளை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு உட்கார் சைதன்யா எனக்கூறி அவள் உட்கார்ந்தவுடன் அவளிடம் தண்ணீரை நீட்டினான் அவளும் மறுக்காமல் வாங்கி பருகிவிட்டு டம்ளரை டேபிளில் வைத்தாள்..  
 
பார் சைதன்யா நான் நிரஞ்சனாவின் பேச்சைக் கேட்பேன் தான் ஆனால் முடிவு என்னுடையதுதான்.. 
 
அவள் சொல்வதற்காக மட்டும் உன்னை தேர்ந்தெடுக்கவில்லை நானும் உன் ஆடைகளை டிஐஜி கல்யாண ஆல்பத்தில் பார்த்தேன் அதோடு உன்னுடைய பொட்டிக்கில் செய்த ஆடைகளிலும் அதன் தரத்தையும் ஆராய்ந்தேன் பிறகு உன்னுடைய டிசைன்கள் அடங்கிய பைல் மற்றும் நீ மாடலாக அதில் தைத்து வைத்திருப்பது எல்லாவற்றையும் பார்த்து திருப்தியான பின் தான் உன்னை தேர்ந்தெடுத்தேன்..  
 
அதோடு நான் அப்படி யார் பேச்சையும் கேட்டு முடிவெடுக்கிறவனா என இத்தனை நாட்களில்  உங்களுக்கு தெரிந்திருக்கும்.. 
 
எல்லாவற்றையும் விட உனக்கு உன் மேலும் உன் திறமை மேலும் நம்பிக்கை இல்லையா எனக் கேட்க அவளுக்கு இப்பொழுது வெட்கமாக போய்விட்டது..
 
 
இதை எதையும் தெரிந்து கொள்ளாமல் போய் விட்டேனே இவன்  எப்பொழுது யார் மூலமாக பொட்டிக் வந்து ஆடைகளை ஆய்வு செய்திருப்பான் அதோடு எப்படியும் இறுதிமுடிவு இவனுடையதாக தானே இருந்திருக்கும் அவனிடம் மரியாதை இல்லாமல் அதிகமாக பேசிவிட்டேன் என்னை பற்றிய தன்னம்பிக்கை எனக்கு இல்லாமல் போனது வெட்கம் தானே அதை அவனாவது உணர்ந்திருக்கிறானே என உதடு கடித்து யோசித்துக் கொண்டிருந்தாள்.. 
 
 
அவளை ரசனையுடன் பார்த்திருந்து விட்டு தண்டனை தர வேண்டியது தான் ஆனால் அது என்ன செய்தது பாவம் வேண்டுமானால் அந்த தண்டனையை நான் தரவா என அவள் உதட்டை பார்த்துக் கொண்டே கேட்டான்..
 
"என்ன" என பிரமித்த விழிகளை அதே ரசனையோடு பார்த்து வாய்விட்டு உல்லாசமாக சிரித்தான்.. 
 
இப்பொழுது அவள் இன்னும் பிரமித்தாள் இப்படி சிரிக்கும் போது எவ்வளவு அழகாக இருக்கிறான்.. 
 
தலைசாய்த்து சிரிக்கும் போது காற்றில் ஆடும் சிகையும் அழகான பல் வரிசையும் அழகான அந்த உதடுகளும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறதே அவள் அவனை விழுங்கி விடுவதைப் போல் பார்க்க அவனும் அவளை பார்த்து ஒற்றைப் புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்டான்.. 
 
ஐயோ பார்த்து விட்டானே என அவள் அழகாக கன்னம் சிவந்து வெட்கப்பட்டாள்..
 
இப்போது விழுங்குவது போல பார்ப்பது அவன் முறையானது அவனின் பார்வையில் மேலும் சிவந்து, "வந்து சாரி சார் நான் ஏதோ தெரியாமல் பேசிவிட்டேன் விருப்பமில்லாமல் தான் தேர்ந்தெடுத்தீர்களோ என நினைத்து விட்டேன்" தடுமாறியபடியே கூறினாள்..
 
அவளையே பார்த்து இருந்தவன் "விருப்பத்தோடு தான் தேர்ந்தெடுத்தேன் தன்யா" என கூறினான்.. 
 
அவன் குரல் ஏதோ செய்ய நிமிர்ந்து அவனைப் பார்க்க அவன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. 
 
இருவர் விழிகளும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே இருக்க பிஏ கருணாகரன் கதவை தட்டியதும் இருவரும் சுயநினைவை அடைந்தனர்.. 
 
அவனை உள்ளே வரச் சொல்லிவிட்டு மிஸ் சைதன்யா இந்த விழா வேலைகள் முடிந்தவுடன் கம்பெனி வேலைகளை கவனியுங்கள்.. 
 
நாளை முதல் ஹரிஷ் மற்றும் கிறிஸ்டியின் டிசைனிங் ஃபைலை பாருங்கள் அவர்கள் அதை எப்படி வடிவமைத்திருக்கிறார்களோ அதேபோல நீங்கள் உங்கள் டிசைன்களையும் பைல் பண்ணுங்கள் என விடை கொடுத்தான் தப்பித்தால் போதும் என அங்கிருந்து ஓடி வந்தாள்.. 
 
அவள் போவதையே புன்னகையுடன் பார்த்துவிட்டு மிதுர்வனும் பிஏ வும் அடுத்தகட்ட வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர்.. 
 
அவள் அறைக்கு வந்து 10 நிமிடம் ஆகியும் அவளுக்கு படபடப்பு அடங்கவில்லை கொஞ்சம் கொஞ்சமாக வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.. 
 
வீட்டிற்கு கிளம்பும் போது பொட்டிக்கில் கொஞ்சம் வேலைகள் இருந்ததால் அதனை முடித்து விட்டு சந்து வந்ததும் அவனிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள்..
 
ஓகே தன்யா நாளை காலை பர்மிஷன் வாங்கிக்கொண்டு 11 மணி போல வந்து வீடு ஹோட்டலை பார்த்துவிட்டு புக் செய்து விடுவோம்.. 
சரி என தலையாட்டி விட்டு பாய் சந்து என விடை பெற்றாள்.. 
 
தனக்கு முன்னமே அப்பாவின் வண்டி அங்கிருந்த செட்டில் நின்றது இன்றைக்கு அப்பா சீக்கிரம் வந்து விட்டார் போல.. 
 
சோஃபாவில் அமர்ந்திருந்தவரை பார்த்து என்னப்பா இன்னைக்கு சீக்கிரம் வந்து விட்டீர்கள் போல..
 
ஆமாண்டா இன்னைக்கு ஆபீஸில் வேலை சீக்கிரம் முடிந்துவிட்டது..
 
சரிப்பா இருங்கள் நான் போய் பிரஷ் ஆகிவிட்டு உடனே வந்து விடுகிறேன்.. 
 
அம்மாவிடம் திரும்பி அம்மா எனக்கும் அப்பாவுக்கும் சூடாக காபி எடுத்து வாருங்கள்.. 
 
அருணாவும் இருவருக்கும் இரு கப்பில் காபியும் அவர்களுக்காக தயாரித்த மாலை சிற்றுண்டியையும் ஒரு தட்டில் எடுத்து வைத்து கொண்டு வந்து கொடுத்தார்..
 
இருவரும் நன்றாக இருப்பதாக பாராட்டினாலும் அருணாவை கிண்டல் செய்யும் பொருட்டு சைதன்யாவிடம் திரும்பிய கதிரேசன் மூன்று வேளை சாப்பாட்டிற்காக என்னவெல்லாம் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது..
 
சைதன்யா கிளுக்கி சிரித்தாள் இருவரையும் பார்த்து முறைத்த அருணா இரவு சாப்பாடு உங்களிருவருக்கும் உப்புமா தான் எனவும் இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு அம்மா தாயே எங்களை மன்னித்து விடுங்கள் என ஒரே நேரத்தில் கோரசாக சத்தமிட்டனர்..
 
வெற்றி புன்னகையுடன் எழுந்த அருணா அந்த பயம் இருக்கட்டும் என இரவு சமயலை செய்ய கிச்சனுக்குள் சென்றார்.. 
 
எதற்கும் அவளை கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும் பாப்பா நம்மை பழிவாங்க வேண்டும் என வேண்டுமென்றே உப்புமாவை செய்தாலும் செய்வாள்..
 
பிறகு வழக்கம் போல இருவரும் தங்கள் அன்றைய நிகழ்வுகளை பேச ஆரம்பித்தனர்.. பேச்சின் நடுவே இரவு உணவை முடித்தனர்..
 
கதிரேசனுக்கு ஒரு பிரைவேட் கம்பெனியில் அக்கௌன்டன்ட் வேலை அதனால் அங்கே நடக்கும் ஒரு சில சுவாரஸ்ய தகவல்களை அவ்வப்போது அவளிடம் பகிர்ந்து கொள்வார்..
 
சைதன்யாவும் அன்றாடம் நடப்பதை அப்பாவிடம் அப்படியே ஒப்பித்து விடுவாள் இன்றும் அது போல் சொல்லிக் கொண்டிருந்தவள் மிதுர்வனை நினைத்து திடீரென வெட்கப் புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.. 
 
அன்றைய நிகழ்வுகளை பற்றி சொல்லிக் கொண்டிருந்தவள் திடீரென நிறுத்திவிடவும் நிமிர்ந்து பார்த்த கதிரேசன் அவள் வெட்கத்துடன் புன்னகைக்க கண்டவுடன் ஆச்சரியமாகிப் போனார்.. 
 
சைதன்யா வரும் வழியில் உன்னை பேய் கீய் அடித்துவிட்டதா.. 
 
திடுமென அவர் அப்படி கேட்கவும் ஒரு நிமிடம் முழித்து விட்டு என்னப்பா என்ன சொல்கிறீர்கள் என கேட்டாள்.. 
 
அவர் சிரிப்புடன் இவ்வளவு நாட்கள் உனக்கு வெட்கப்பட எல்லாம் தெரியுமென்பதே எனக்கு தெரியாது பாப்பா இப்போது தானே அதையெல்லாம் செய்கிறாய் அதுதான் வழியில் பேய் கீய் அடித்திருக்குமோ என கேட்டேன்..
 
அவரை முறைத்தவள் அப்பா பேய் அடித்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமா அப்பா எச்சரிக்கையுடன் அவர் எழுந்து கொள்ள அவளும் எழுந்தாள்.. 
 
தெரியாதில்லையா இப்பொது காட்டுகிறேன் என பக்கத்திலிருந்த கம்பை எடுத்துக்கொண்டு அவரை துரத்த அங்கும் இங்கும் ஓடி கடைசியாக அவரது ரூமிற்குள் புகுந்து கொண்டு கதவை சாத்தி கொண்டார்.. 
 
உள்ளிருந்து குட்நைட் தன்யாம்மா என்ற குரல் மட்டும் வந்தது.. 
 
புன்னகையுடன் அவளது அறைக்கு உறங்கச் சென்றாள்..
 
 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.