(Reading time: 1 minute)

சில்லன்ற சின்னஞ்சிறு மழைத்துளியாய் 

என்னுள் நித்தமும் துளிர்த்திடும்

உன் மீது நான் கொண்ட

அதீத அன்பின்  சாரல் -

விண்ணிலிருந்து

தூறலாக துவங்கி - இன்று

பெருக்கெடுத்து சாலையெங்கும்

வெள்ளமாக ஓடும் போது -

ஏனோ மழை நீரின் வாசனையில்

உன் வாசம் தெரிந்திட

தத்தளித்து தவிக்கும் என் மனது!

உணர்வுகளின் நீரோட்டத்தில்

மழை நீரின் இதம் அறிந்து

கனவுகளுடன் காத்திருக்கும்

மழைக்கால வெயிலாக நீ!

3 comments

  • [quote name=&quot;Kalai Selvi Arivalagan&quot;]நன்றி !<br />ஆனால் என் கவிதைகளை வாசிப்பவர்கள் மிக குறைவே. என் எண்ண ஓட்டங்களை உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டுமே புரிந்து கொள்ள முடிவதால் தானோ?[/quote]<br />சகோதரி! என் கதைகளையும் சிலரேபடித்தாலும் இருநூறு சிறுகதைகளை தாண்டி எழுதிவருகிறார். சில்சீ ஆதரிக்கிறது. எழுதுங்கள், தொடர்ந்து!
  • நன்றி !<br />ஆனால் என் கவிதைகளை வாசிப்பவர்கள் மிக குறைவே. என் எண்ண ஓட்டங்களை உங்களைப்போன்ற ஒரு சிலரால் மட்டுமே புரிந்து கொள்ள முடிவதால் தானோ?
  • இந்த கற்பனைக்கும் சொல்வளத்துக்கும் எத்தனை முறை பாராட்டினாலும் தகும்! கலைச்செல்வி! முந்தைய கவிதை 'நினைவுகளாய்' பாராட்டி எழுதியிருந்தேன்! அது ஏன் மறைந்துவிட்டது என தெரியவில்லை!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.