பரதேசியாய் பாரினில்
பாதம் பதித்திட்ட மானிடனே
வாழும் வாழ்க்கை ஒரு
வாடகை வீடு மட்டுமே...
வாழும் காலம் வரை
வசித்திட மட்டுமே முடியும்..
சொந்தம் கொண்டாடிட
சொத்து பத்திரம் அல்ல
அடித்து சண்டையிட
அடமானப் பொருளும் அல்ல...
நிம்மதி தேடி அலைய
நிரந்தரமும் அல்ல...
வாழப்போவது சிறிது காலம்
வரையறுக்கப்பட்ட கொஞ்ச காலம்
தொடக்கமும் முடிவும்
தொடங்கியவன் கையில் இருக்க
தொய்வில்லாமல் ஓடிடு வாழ்வில்...
வாழ்ந்து முடிக்கும் போது
வரலாறு உன்னை அணைத்திட
வீர வசனம் பேசாமல்
வீறு கொண்டு எழுந்திடு
கைகளில் ஏந்திய
தாய் மண்ணை காத்திட...