(Reading time: 3 - 5 minutes)
உன் கையில் என்னை கொடுத்தேன் - சசிரேகா
உன் கையில் என்னை கொடுத்தேன் - சசிரேகா

Chillzee KiMo Book Reviews - உன் கையில் என்னை கொடுத்தேன் - சசிரேகா [Un kaiyil ennai koduthen - Sasirekha]

Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்து இருக்கும் நாவல் 'உன் கையில் என்னை கொடுத்தேன் - சசிரேகா [Un kaiyil ennai koduthen - Sasirekha ' .

அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

 

கதை சம்மரி:

ஜெய்சூர்யா சிறுவனாக இருக்கும் போது வெண்மதியை சந்திக்கிறான். ஆவலுடன் நட்புடன் பேச விரும்புகிறான். ஆனால் வெண்மதி அவனுடன் பேசாமல் சண்டைப் போடுகிறாள். இதனால் வருத்தப்படும் ஜெய்யை சமாதானப் படுத்த நன்றாக படித்து வேலைக்கு போய் வெண்மதியை கல்யாணம் செய்துக் கொள் என்று சொல்கிறார் அவனுடைய தாத்தா. இதையே மனசுக்குள் தெளிவாக பதிய வைத்துக் கொள்கிறான் ஜெய்.

வருடங்கள் ஓடிப் போகிறது. வெண்மதிக்கு அவனை அடையாளம் தெரியாமல் இருக்க சூர்யா என்றப பெயரில் அவளை திருமணம் செய்துக் கொள்ள முயற்சியில் இறங்குகிறான். கல்யாணத்திற்கு சம்மதிக்க வெண்மதி ஒரு கண்டிஷன் வைக்கிறாள். கல்யாணத்திற்கு பிறகு ஒரு பெண் குழந்தையை தத்து எடுக்க வேண்டும் என்பது கண்டிஷனை. மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் வெண்மதி மேல் இருக்கும் அன்பினால் அதற்கும் சம்மதிக்கிறான் ஜெய். அதனால் அவனைப் பார்க்காமலே கல்யாணத்திற்கு சம்மதிக்கிறாள் வெண்மதி. கல்யாணம் நடக்கும் நேரத்தில் வெண்மதியின் அப்பா இறந்து போய் விடுகிறார். அதற்கு மாப்பிள்ளை தான் ரணம் என்று வெண்மதி நினைத்துக் கொள்கிறாள். அதனால் மாப்பிள்ளை யார் என்று வெண்மதிக்கு தெரியாமலே கல்யாணம் நின்றுப் போகிறது.

அப்பாவிற்கு பிறகு எல்லா குடும்ப பொறுப்பையும் எடுத்துக் கொள்கிறாள் வெண்மதி. தங்கைகளுக்கு திருமணமும் செய்து வைக்கிறாள். இப்போதும் அவள் நினைவாகவே இருக்கும் ஜெய் மீண்டும் அவள் வாழ்வில் இடம் பெற முயற்சி செய்கிறான்.

ஜெய்யின் காதல் வெற்றிப் பெற்றதா? ஜெய் சூர்யா இருவரும் ஒருவர் தான் என்பது வெண்மதிக்கு தெரிந்தால் என்ன ஆகும்? என்ற கேள்விகளுக்கு நாவல் வழியே பதில் சொல்லி இருக்கிறார் சசிரேகா.

 

குடும்ப நாவல் பிரியர்களுக்கு பிடிக்கும் வித்தியாசமான நாவல்.

  

டுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்திருக்கும் நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே - சசிரேகா [Naan vazhum vazhve unakkagathaane - Sasirekha] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.

ன் கையில் என்னை கொடுத்தேன் - சசிரேகா [Un kaiyil ennai koduthen - Sasirekha] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- ($1.49) முதல் தொடங்குகிறது!

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.