Chillzee KiMo Book Reviews - நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு - சசிரேகா [Nandri solla unakku varthai illai enakku - Sasirekha]
Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்து இருக்கும் நாவல் 'நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு - சசிரேகா [Nandri solla unakku varthai illai enakku - Sasirekha]' .
அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.
கதை சம்மரி:
சைதன்யன், சூர்யா உறவு முறையில் அண்ணன் தம்பி. சூர்யாவிற்கு திருமணம் முடிந்த உடன் சகோதரர்கள் திருப்பதிக்கு செல்கிறார்கள். அங்கே பிடிக்காத கல்யாணத்தில் இருந்து தப்பி வந்த அம்ரிதாவை சந்திக்கிறார்கள். அவளுக்கு உதவு முயற்சி செய்கிறார்கள். அம்ரிதா திருமணத்தை நிறுத்த சைதன்யன் அவளுடைய கணவன் என்று சொல்லி விட அதுவே நிஜமாகி விடுகிறது. அவள் ஊரில் பஞ்சாயத்து வைக்கிறார்கள். திருமணத்தை ஏற்று கொள்கிறார்கள். ஆனால் சைதன்யன் நல்லவன் என்று நிரூபிக்க அம்ரிதா வீட்டு பணத்தை வாங்காமல் தனியாக உழைத்து கட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள்.
சைதன்யன் அதை செய்து காட்டி நிருபித்தானா? அம்ரிதாவுடனான அவனுடைய கல்யாணம் வெற்றிப் பெற்றதா? என்ற கேள்விகளுக்கு நாவல் வழியே பதில் சொல்கிறார் சசிரேகா.
ஜனரஞ்சக நாவல் பிரியர்களுக்கு பிடிக்கும் ஜனரஞ்சக நாவல்.
அடுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்திருக்கும் இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா - சசிரேகா [Idhayam pesugindra varthai unthan kathil ketkumo - Sasirekha] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு - சசிரேகா [Nandri solla unakku varthai illai enakku - Sasirekha] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- ($1.49) முதல் தொடங்குகிறது!
- அபூர்வா