(Reading time: 9 - 18 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

டம்ளர்”

  

"நன்னா சாப்பிடணும். அரை வயித்துக்குச் சாப்பிடறதை இனிமே விட்டுடு. உனக்கு இங்கே ஒரு குறைச்சலும் இல்லை. வீட்டிலே சகல சாமானும் கொட்டி வச்சிருக்கு- சமையல் பண்றேன். நீ கடந்து சஷடப்படாதே. கூட மாட நானே சை பண்ணு போறும். என்ன சமைக்கலாம்?' என்று சொல்லிக் கொண்டே கூடை நிறைய காய்கறிகளை எடுத்து வந்து வைத்தாள்.

  

கறிகாய், சமையல் என்று எதிலும் பற்று இல்லாமல், 'உங்க இஷ்டம் போல பண்ணுங்க. எனக்கு எல்லாமே பிடிக்கும். பிடிக்கிறதும் பிடிக்காததும் மனசைப்பொறுத்த விஷயம்" என்று ஏதோ பேசினாள்.

  

"அப்படியில்லைடி நர்மதா! எனக்கு இருக்கிறது ஓரே தம்பி. அவனும் நீயும் சந்தோஷமர் இருக்கிறதுதான் எனக்கு முக்கியம். அவன் கொஞ்சம் அசடு. இந்தக்காலத்து பிள்ளை கள் மாதிரி இருக்க மாட்டான். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் பொறுத்துண்டு போகணும்."

  

நர்மதா குனிந்தபடி கறிகாய் நறுக்கிக் கொண்டிருந்தாள்.

  

கொஞ்சம் முன்னே பின்னே என்றால், புரியமாட்டேன் கிறது. அழகின் பரவலாய், ஒரு ஆடவனை மயக்கும் சக்தி இந்த கண்களுக்கு, அதரங்களுக்கு இருக்கிறது. அவள் படுக் கையில் சாய்ந்து கிடந்தபோதும், ஒருக்களித்து இருந்த போதும் அவன் விலகி விலகி ஒதுங்கிப்போகக்கூடிய அசடனா கவா இருக்கிறான்? ஐயோ கடவுளே! இந்ந அசடை எப்படி சமர்த்தனாக்குவது?”

  

கங்கம்மா ஏதேதோ ஸ்லோகங்களைச் சொல்லிக்கொண்டி ருந்தாள். பெரிய அளவில் வெங்கடாஜலபதியின் படம் மாட்டியிருந்தது. மிக சாந்நித்தியமாக இருந்தது அவர் தோற்றம். வெள்ளிக்குத்து விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி இருந்தாள்.

  

"இந்தப் படம் என் புருஷன் திருப்பதியிலேருந்து வாங் கிண்டுவந்து கொடுத்தார். அவருக்கு ஒரு புள்ளை வேணும்னு ரொம்ப அசை. ஆனா. என்னவோ அவருக்கு சபல புத்தியே இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.