(Reading time: 7 - 14 minutes)
Muthu Sippi
Muthu Sippi

போடுவார்கள் அம்மா!"

  

பவானிக்கு மகிழ்ச்சியும் கோபமும் போட்டி போட்டுக் கொண்டு கிளம்பின. இந்தப் பிள்ளை இப்படிப் படிப்பில் அக்கறை இல்லாமல் தண்ணீரிலே ஏலக்காய் போட்டு உபாத்தியாயர்களிடமிருந்து மார்க்கு வாங்கப் பிரயாசைப் படுகிறானே! உண்மையிலே உழைத்துப் படித்தால் பாலு எவ்வளவு கெட்டிக்காரனாக இருப்பான்?' என்று நினைத்து வேதனைப் பட்டாள் அவள்.

  

தாயின் முகத்தில் தேங்கி நிற்கும் கவலையைப் பார்த் ததும் பாலு. "அம்மா கட்டாயம் நான் பாஸ் பண்ணி விடுவேன் அம்மா?.அடுத்த தடவை என்னை எந்தப் பள்ளிக்-கூடத்தில் சேர்க்கப் போகிறாய்?" என்று கேட்டு அவள் முகத்தை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

  

அவள் பதில் கூறுவதற்குள் தெருவில் அவனுடைய சிநேகிதர்கள் வந்து அழைத்தார்கள். பாலு விளையாடுவதற்காக வெளியே எழுந்து சென்றான்.

  

முற்றத்து வெயில் தாழ்வாரத்தில் ஏறி வந்து கொண்டிருந்தது. பவானி குளித்துச் சமையல் செய்வதற்காக கொல்லைப்புறம் போக ஆரம்பித்தவள் தெருக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு நின்றாள்.

  

வாசல் கதவைத் திறந்து கொண்டு நடுத்தர வயதினனான வாலிபன் ஒருவன் வந்தான். நல்ல உயரமும், மிடுக்கான பார்வையும், எடுப்பான நாசியும், அழகான பதாற்ற-முமுடைய அவன் அவளைப் பார்த்ததும் புன் சிரிப்புடன், "கல்யாணராமன் வீடு இதுதானே? டில்லியில் அக்கௌண்ட்ஸ்' ஆபீசில் இருந்து ரிடையர் ஆனவர். அவரைப் பார்க்க வேண்டும்" என்று கேட்டான்.

  

பவானி சிறிது நேரம் தயங்கி நின்றாள். பிறகு நிதானமாக, ”இதுவும் அவர் வீடுதான். ஆனால் அவர் இங்கு இல்லை. பக்கத்து வீட்டில் இருக்கிறார். இங்கே நாங்கள் குடியிருப்பவர்கள்" என்று கூறினாள்.

  

"ஓ! ஐஸி! அதுவும் மாமாவின் வீடுதானா? பக்கத்து வீட்டையும் வாங்கி விட்டார் போலிருக்கிறது. நான் இந்தப் பக்கம் வந்து ஆறேழு வருஷங்கள் ஆயிற்று. என் தாயார்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.