(Reading time: 4 - 8 minutes)
Muthu Sippi
Muthu Sippi

Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 33 - சரோஜா ராமமூர்த்தி

2.33. அவள் செய்த பாக்கியம்

  

பிறருடைய வாழ்க்கையில் நேரிடும் இன்னல்கள் நம்மை அவ்வளவாக வருத்துவதில்லை. அப்படிச் சிறிது கலக்கம் ஏற்பட்டாலும் அது நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிவதில்லை; ஸ்ரீதரன் தம் கண்களால் எத்தனையோ துயரங்களைப் பார்த்தவர். எவ்வளவோ அவமானங் களைப் பற்றிக் கேட்டவர். ஆனால் அவரை அவை அவ்வளவாக வருத்தவில்லை.

  

அன்று வைத்திய சாலையில் அவர் பெயருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. வீட்டுக்குப் புறப்படும் போது அதை ஜேபியில் வைத்துக் கொண்டு கிளம்பினார். வீட்டிற்கு வந்ததும். தம் ஜேபியில் இருந்த கடிதத்தைப் பற்றி மறந்து விட்டார். சாப்பிட்டு விட்டு ஓய்வு பெறும் போதுதான் காலையில் ஜேபியில் வைத்த கடிதத்தைப் பற்றி நினைவு வந்து அதை எடுத்துப் படித்தார். அவர் முகபாவம். சட்டென்று மாறிக் கொண்டே வந்தது. மிகுந்த வேதனையுடன் அப்படியே சமைந்து உட்கார்ந்து விட்டார் அவர்.

  

விஷயம் முற்றிப் போகும் வரை அசட்டுத் தைரியத் துடன் தன்னிடம் யாவற்றையும் மறைத்து வைத்த ராதாவைக் குற்றம் சொல்வதா? இம்மாதிரி ஒரு கணவனைத் தேர்ந்தெடுத்து மணந்து கொண்டவளை பற்றி என்ன சொல்வது?

  

விதியின் கொடூரமான பிடிக்குள் அகப்பட்டுத் தன் சகோதரி தவிப்பதைக் கண்ட ஸ்ரீதரன். அவளிடமிருந்து உண்மையை அறிய அவளைத் தேடிச் சென்றார்.

  

அவள் மிகவும் இளைத்திருப்பதை அன்றுதான் ஸ்ரீதரன் கவனித்தார். கையில் கடிதத்துடன் பரபரப் படைந்து காணப்பட்ட தமையனைக் கவனித்த ராதா ஒன்றும் பேசாமல் இருக்கவே, ”ராதா! உன் புருஷன் வேலையில் இருப்பதாக என்னிடம் நீ சொன்னதெல்லாம் பொய்தானே?" என்று கேட்டார் வருத்தம் தொனிக்கும் குரலில்.

  

அவருக்கு உண்மை தெரிந்து விட்டது என்பதை அறிந்த அவள் ”ஆமாம் அண்ணா ! அவரைப் பற்றி சமீப காலத்து விவரங்கள் எனக்குத் தெரியாது. உங்களுக்கு ஏதாவது கடிதம் எழுதினாரா?" என்று கேட்டாள் கண்களில் கண்ணீர் பெருக.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.