(Reading time: 7 - 13 minutes)
Couple

 "நான் இப்ப அப்பா கட்சி!"

 " அடப்பாவி! காலை வாரிட்டியே, துரோகி!"

 " அம்மா! யோசித்துப் பார்! நீ சொல்வது சரியில்லைனு புரியும்! என்னை ஒருவர் தவறாக பேசினால், நான் உடனே அவரை அடிக்கணுமா? பதிலுக்கு வசை பாடணுமா? அப்படிச் செய்தால், பிரச்னை தீருமா, வளருமா? இரண்டாவது, நம்மைப் பற்றி பிறர் விமரிசிக்கும்போது, நாம் உடனடியாக பதில் பேசாமல், சிந்திக்கவேண்டும். எதிராளி சொல்வது சரியானால், திருத்திக் கொள்ளணும், தவறானால், ஒதுக்கித் தள்ளிவிடணும். மல்லுக்கு நின்றால், நமது நேரமும், சக்தியும் வீணாவதுதான் நடக்கும்! அவர் தன் தவறை உணரமாட்டார். பதிலாக, நாம் மௌனமாயிருந்தால், அவர் சிந்திப்பதற்கான, சிந்தித்து தன்னை திருத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்! ஒப்புக்கொள்கிறாயா?"

 " அப்பாவுடன் சேர்ந்து பிள்ளையும் கெட்டுப் போயிட்டே! தலைக்கு மேலே வேலையிருக்கு எனக்கு, நீ கிளம்பு!"

 பிரபு முகமலர்ச்சியுடன் நகர்ந்தான்.

 இந்தக் காட்சியை முழுவதும் கவனித்துக் கொண்டிருந்த சபேசனின் மனதில் எந்தச் சலனமும் இன்றி, அவர் இயல்பாக இருந்தார்! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.