கொல்லவா உன்னை கொஞ்சம் கொல்லவா - கிருஷ்ண பாபு
டாக்டர்,யாரோ என் காதில் விடாம பேசுவது போல இருக்கு!'
'கல்யாணமானா அப்டிதான் இருக்கும்! பயப்பட வேண்டியதில்லை! ஒய்புக்கு தெரியாம பஞ்சு வச்சுக்கங்க!'
'அதில்லை டாக்டர்,இது வேற குரல்!செல்ப் டிரைவிங் பண்றப்போ எதிர்ல வர்ற லாரி மேல மோதச் சொல்லுது!'
'அப்புறம்?'
'கூர்மையான கத்தியை பார்த்தா 'எடுத்து யாரையாவது குத்திட்டு ஜெயிலுக்கு போடா' அப்டீனு கத்துது!'
குண்டூசி உட்பட எல்லாவற்றையும் டிராயரில் போட்டு பூட்டினார் டாக்டர்.
'அப்புறம்?'
'மனைவி போட்ட காபியை கஷ்டப்பட்டு குடிச்சதும் 'இன்னொரு கப் கேளுடா'னு மிரட்டுது!'
'அச்சச்சோ!அப்புறம்?'
'ரொம்ப கஷ்டப்பட்டு இந்த க்ரைம் முயற்சிகளை எல்லாம் தவிர்த்துகிட்டு வர்றேன் டாக்டர்!'
'பாவம்தான் நீங்க!'
'ஆனா சில நேரம் நல்லதும் செய்யுதே!'
'அப்படியா? சொல்லுங்க'
'மகன் பத்து மார்க் வாங்கின கோபத்துல அடிக்கப் போனா 'உன்னைவிட எத்தனை மடங்கு கூடுதலா எடுத்திருக்கான்!
உன் கண்றாவி அறிவுரையை சொல்றதோட நிறுத்திக்கடா'னு திட்டுது!'
'ரொம்ப நல்லதுதான? .படிப்புக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம்? நான்லாம் இப்பவரைக்கும் ப்ளஸ்டூல மூணு அரியர் வச்சிருக்கேன்! நான் நல்லா இல்லையா?'
'சரியா கேட்கல. என்ன டாக்டர்?'
'விடுங்க!இது ஒருவகை மனச்சிதைவு நோய். தாழ்வு மனப்பான்மை,தனிமை உணர்வு உள்ளவர்களுக்கு இது வரும். பாசிட்டிவ் எண்ணங்களில் உங்கள் கவனங்களை செலுத்துங்கள்.ரிலாக்ஸா இருங்க. மியூசிக் கேளுங்க. மாத்திரை எழுதித் தர்றேன் ரெகுலரா சாப்பிடுங்க. அடுத்த வாரம் என்னை வந்து பாருங்க!'
தற்செயலாக நர்ஸ் கதவைத் திறந்ததும் டாக்டர் முறைத்தார்.
'கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரணும்! தெரியுதா?'
'சாரி சார்'
வெளியேறிய நர்ஸ் இன்னொரு நர்ஸிடம் சொன்னாள்.
'ஆமாம்டி!நீ சொன்னது போல டாக்டர் தனியாதான் பேசிக்கிட்டு இருக்காரு! பேஷண்டே வராததால இப்டி ஆகிட்டாரோ?பாவம்ல!'
{kunena_discuss:785}