தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 49 - பிந்து வினோத்
49. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பாரதியிடம் ஃபோன் இல்லாததால், மாலை மூன்று மணி அளவில் பவித்ராவின் நம்பருக்கு ஃபோன் செய்தான் விவேக். பவித்ரா பாரதி உடல் நலம் சரியில்லை என்று மதியமே வீட்டிற்கு கிளம்பி சென்று விட்டதாக தகவல் சொன்னாள்! என்ன, ஏது என்று விபரங்கள் புரியாமல் திகைத்த விவேக், ஃபோன் செய்து பாரதியிடம் பேசலாம் என்று தோன்றிய எண்ணத்தை உடனடியாக கைவிட்டான். மற்ற வேலைகளையும் அப்படியே விட்டு விட்டு அவசரமாக ஆஃபீஸில் இருந்து கிளம்பினான்.
வீட்டிற்கு வந்ததும், நேராக அவர்களின் அறைக்கு சென்றவன், அங்கே பாரதி அயர்ந்து தூங்குவதை பார்த்து அவசரமாக அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான். சூடாக இல்லை என்பதை உணர்ந்து அசுவாசபட்டான்!
விவேக்கின் ஸ்பரிசத்தில் கண் விழித்த பாரதி, கணவனை கண்டு முதலில் குழம்பினாள்.
“அவ்வளவு நேரமா தூங்கினேன்? மணி அஞ்சு மேல ஆச்சாங்க?”
“அதெல்லாம் இல்லை, மணி இன்னும் நாலு கூட ஆகலை. என்ன ஆச்சு ரதி? உனக்கு உடம்பு சரியில்லைன்னு பவித்ரா சொன்னாங்க???”
“ப்ச்... ஒண்ணுமில்லை ஆனந்த்... டையர்டா இருந்தது...”
“நீ சரியா சாப்பிடுறது இல்லையா ரதி? இனிமேல் நீ சாப்பிடுறது எல்லாத்தையும் நான் கவனிக்கனும்...” சொல்லியபடி பாரதியின் கால்கள் அருகில் அமர்ந்து அந்த மெல்லிய பாதங்களை தன் மடியில் எடுத்து வைத்தான் விவேக்.
“என்னங்க நீங்க...”
“சும்மா இரு...” என்றபடி மெதுவாக பாரதியின் பாதங்களை பிடித்து விட்டான் விவேக். பாரதிக்கு இருந்த உடல் அயர்வில் அது இதமாக இருந்த போதும், அவளுக்கு கூச்சமாகவும் இருந்தது.
“ப்ளீஸ் எழுந்து வாங்க... எனக்கு என்னவோ போல இருக்கு...”