தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 65 - பிந்து வினோத்
65. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
மதுவின் 'அறிவிப்பைக்' கேட்டு மற்றவர்கள் அனைவரும் வியப்புடன் அவளை பார்த்தார்கள்!
“மது, நீ இப்போ தானே செகன்ட் இயர் படிக்குற! அதுக்குள்ளே உனக்கு யார் இப்போ கல்யாணம் செய்ய போறதா சொன்னது? மறைமுகமா ஏதாவது மெசேஜ் சொல்றீயா என்ன?” என்றான் நிரஞ்சன் கேலியாக.
அவன் பக்கம் ஒரு கோப பார்வை வீசிய மது,
“இல்ல அண்ணா, நான் சீரியஸா தான் பேசுறேன்,“ என்றாள்.
“என்ன விஷயம் மது? எதுக்கு இப்போ இந்த பேச்சு?” என்றாள் கற்பகம்.
“அம்மா, இந்த உலகத்தில இருக்குற நல்லவங்க எல்லாம் மொத்தமா நம்ம வீட்டில தான் இருக்காங்கன்னு நான் நினைச்சிட்டு இருந்தேன்... என் அம்மா அப்பா போல் பெரிய மனசு உள்ளவங்க யாரும் இல்லை... என் அண்ணன் இரண்டுப் பேரையும் போல நல்லவங்க யாரும் இல்லை...”
“இப்போ நீ மாத்தி நினைக்குற மாதிரி என்ன நடந்திடுச்சு?”
“இன்னும் என்ன நடக்கனும்? பாரதி மேடம் எனக்கு அண்ணியா வந்தப்போ நான் அவ்வளவு சந்தோஷப் பட்டேன்... என் அண்ணனை விட அவங்களுக்கு சரியான ஜோடி யாரும் இல்லைன்னு நினைச்சேன்...”
விவேக் மும்முரமாக உணவு உண்பதாக காட்டிக் கொண்டு மது பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தான்! பேச்சு போகும் திசை உணர்ந்து மற்றவர்கள் அமைதியாக இருந்தார்கள்!
“ஆனால், இந்த வீட்டில இப்போ நடக்குறது எல்லாம் பார்த்து தான் உலகத்தில் எல்லோரும் எப்படி இருப்பாங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன்! அதனால தான் நான் கல்யாணமே செய்துக்குறதில்லைன்னு முடிவு செஞ்சுட்டேன்!!!”