நகர தொடங்கி இருந்த ஏ.ஸி பஸ்சின் ஜன்னலோரம் அமர்ந்து வெளியே தெரிந்த பெற்றோருக்கும், தங்கைக்கும் கை அசைத்த விக்ராந்த் அவர்கள் அவனின் கண்ணில் இருந்து மறையவும் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்துக் கொண்டான்...
ஒரு வாரம் குடும்பத்தினருடன் கழித்ததில் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது...
‘வீட்டுக்கு வர மருமகள் பொறுப்பானவளா இருக்கனும், பொறுமை, அன்பு உள்ளவளா இருக்கனும்... பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க தெரிந்தவளா இருக்கனும்... பார்க்கவும் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கனும்... படிச்சிருக்கனும், பண்போட இருக்கனும்...’
அம்மா சொன்னது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது...
தானாகவே போட்டோவில் பார்த்த பிரியாவின் முகம் அவன் நினைவில் தோன்றியது...
...
This story is now available on Chillzee KiMo.
...
்டியது. பெண் வீட்டினர் தன்னை முறைப்பதை உணர்ந்துக் கொண்ட பரமசிவம்,
“கல்யாணத்திற்கு முன் அப்படி பேசும் பழக்கம் எல்லாம் இவங்க குடும்பத்தில் இல்லை தம்பி... கல்யாணத்திற்கு பிறகு காலம் முழுக்க பேச தானே போறீங்க....” என்றவர் விக்ராந்தின் அனல் கக்கும் பார்வையில் வாயை மூடிக் கொண்டார்.