மறுநாள்,
" எங்களை எங்க கூட்டிட்டு போற அர்ஜுன் ? "
" உங்க மருமகள் குடும்பத்தை அம்மா "
" டேய் ...என்னடா இப்படி சொல்லுற ? "
" கூல் டவுன் மம்மி ...அவங்க எல்லாரும் இப்போ சரவணபவன் ல லஞ்ச் சாப்ட போய்ட்டு இருக்காங்க ...நாமளும் ஜாய்ன் பண்றோம் ....."
" லூசா மாமா நீங்க ? நம்ம எப்படி அவங்களோடு சாப்பிட முடியும் "
"சரவணபவன்ல ஒரு மேஜைக்கு ஒரு குடும்பம்தான் உட்காரணும்னு ரூல்ஸ் இல்ல ஜானு "
" நான் அப்படியா சொன்னேன் ? "
" கிருஷ்ணாவுக்கு நான் பெஸ்ட் ப்ரண்டு...சுபாவுக்கு நீ பெஸ்ட் ப்ரண்டு ..இந்த ரீசன் போதாதா ? வா பார்த்துக்கலாம்"
" எதையுமே சொல்லிட்டு செய்யமாட்டியாடா நீ ? கல்யாணமாச்சும் முன்னாடியே சொல்லிடுவியா இல்ல லாஸ்ட் மினிட்ல எங்களை கூட்டிடு போவியா? "
" அது உங்க பேர பிள்ளையை கேட்டுடு சொல்றேன் மா "
" அட பாவி ..... "
ஹோட்டலில்,
" அண்ணா ஆர்டர் பண்ணலாமா..."
" பொறுடா"
" அண்ணா பசிகிது "
" 5 மினிட்ஸ் சுபா "
" கிருஷ்ணா என்னடா நடக்குது "
"ஐயோ அம்மா அஞ்சு நிமிஷம் இருங்க "
" யாரகாச்சும் வைட் பண்றோமா கிருஷ்ணா "
" செம்ம ஷார்ப் சித்தி நீங்க ...என் ப்ரண்டு அவன் குடும்பத்தோட வரான் "
ரகுவும் சுபாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, மீராவை எதிர்பார்த்த சிவகாமியோ சிறு ஏமாற்றத்தோடு அசுவாரஸ்யமாய் பார்த்தார் .. அவங்களை நெடுநேரம் காத்திருக்க வைக்காமல் மூவரும் அங்கே வர, அந்த இருவர் மட்டும் அதிர்ச்சியில் உறைந்தனர்.....!
( அந்த இருவர் யார் ? யாரு யாரை அறிமுகபடுத்த போறாங்க ? லஞ்ச் சாப்பிடுவாங்களா மாட்டாங்களா? இதெல்லாம் அடுத்த எபிசொட் ல சொல்றேன் ... பிளஸ் அடுத்த எபிசொட் " கோகுலஷ்டமி ஸ்பெஷல் " என்பதையும் சந்தோஷாமாக தெரிவித்து கொள்கிறேன் ..... அப்பறம் ....எனக்கு சனிகிழமை எக்ஸாம் இருக்கு ...நம்மளையும் நம்பி படிக்க வைக்கிற ஜீவன்களுக்காக நான் சின்சியரா படிக்கணும் இல்லையா? சோ அடுத்த எபிசொட் எக்ஸாம் முடிஞ்சதும் தான் கொடுப்பேன் ... என்னை லைட்டா திட்டிட்டு என் எக்ஸாம் காக வேண்டிகோங்க ..நன்றி ஹீ ஹீ )
தொடரும்
{kunena_discuss:734}