ரேவதி சின்ன அதிர்வுடன் காமாட்சியை பார்த்தாள்...
“இதை நான் யோசிக்கவே இல்லையேக்கா... ஆனால் இந்த காலத்து பொண்ணுங்க அதை எல்லாம் யோசிக்குறாங்களா என்ன?”
“ரேவதி! திரும்ப நந்திதாவை பத்தி தப்பா பேசாதே.... உனக்கு என்ன தெரியும்னு சொல்லு, நானே நந்திதாவை கூப்பிட்டு உன் முன்னாடியே நேரா கேட்கிறேன்... ஆனால் ஒரு பொண்ணை பத்தி இப்படி தப்பா தாறுமாறா பேசாதே.... அது சரி இல்லை.... உன்னை பத்தி எனக்கு தெரியும். பாசம்னு சொல்லி இன்னும் இன்னும் கீழே போகாதே....”
“சாரிக்கா.... இனிமேல் பேசலை.... என் மனசு சரியில்லை... நான் இப்படியே கிளம்புறேன்....”என்ற ரேவதி, சிறிது தயக்கத்துடன்,
“துளசி கிட்டேயும் சொல்லிடுங்க....” என்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...துளசி? அவ இல்லாமல் இவ்வளவு அமைதியா இருக்கு...! கலகலன்னு அவ பேச்சை கேட்டுட்டே சாப்பிட்டு பழக்கமாகி போச்சு.....”
காமாட்சி பக்கம் தயக்கமான பார்வை ஒன்றை தந்த துளசி,
“அவளுக்கு தலை வலின்னு சொன்னா மாமா....” என்றாள்.
“என்னம்மா அவ சொன்னா அப்படியே விட்ருவீயா? என்ன பிரென்ட் நீ?”