Name : பிணை வேண்டும் பன்மாய கள்வன்: Pinai vendum panmaaya kalvan
Author : Sagampari சாகம்பரி
காதலோ... அன்போ... பாசமோ… நல்ல உறவுகளை நாம் தேடித் தேடி அலைவோம்.
அப்படி தேடித்தேடி அலைந்து காத்திருந்து கிடைத்த ஒன்றை நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறோமா என்றால்... இல்லை. ஏனெனில் ஒவ்வொரு உறவிற்கும் ஒரு வரையறையை கொடுத்த தந்து கொண்டு அந்த வரையறைக்குள் அந்த உறவு இருக்கிறதா அவர்களது போல நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தான்
ஆராய்ந்து கொண்டே இருக்கிறோம். எதுவாக இருந்தால் என்ன?. உறவு... உறவுதான்!. அதை நாம் முதலில் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆராய்ந்து கொண்டே இருக்கிறோம். எதுவாக இருந்தால் என்ன?. உறவு... உறவுதான்!. அதை நாம் முதலில் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
ரோஜாபூவிற்கென்று லரையறை எதுவும் இருக்கிறதா…?. இதுதான் அதன் நிறம்… இதுதான் அதன் மணம்… இதுதான் அதன் அளவு என்று குறிப்பிட்டு சொல்ல முடியுமா? அது கொடி வகையா செடி வகையா என்று கூட தெரியாது. அத்தனை வகைகள் இருக்கின்றன. ஆனால் அவை அத்தனையையும் ரோஜா என்றுதானே எடுத்துக் கொள்கிறோம்.
அதுபோலத்தான் ஒவ்வொரு உறவிற்கும் அன்பும் அக்கரையும் இருந்தால் போதும். அது நீடித்து நலமுடன் இருந்து நம்மையும் வாழ வைக்கும். காதலுக்கு இது மிகவும் பொருந்தும். நாம் நேசிப்பவரிடம் உண்மையான அன்பு கொள்வதும் அவர் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று அக்கரை கொள்வதும்தான் அந்த காதலை சிறப்பிக்கும்.
இது ஒரு காதல் கதைதான். கதாநாயகன் ஹிதேஷிற்கும் கதாநாயகி பிரமோதாவவிற்கும் இடையேயான காதல்… அந்தப் பாதை.. அதை அவர்கள் கடந்து வந்த விதம்… ஆகியவற்றைப் பற்றிய கதைதான். பிணை வேண்டும் என்றால் அடிமையை தேடும் என்றும் கொள்ளலாம்.. அடிமையாக வேண்டும் என்றும் கொள்ளலாம்.. யார் யாராகிறார்கள் என்றூ கதையை படித்து தெரிந்து கொள்வோமா?