(Reading time: 7 - 13 minutes)

ன்று..இரவு..மூன்றில் ஒரு குரங்கு கிளம்பத் தயாராய் இருந்த ரயிலில் ஏறியது.பெட்டி பெட்டியாய் அலைந்தது.இங்கும் அங்கும் ஏதாவது உணவு கிடைக்குமா என்று பார்த்தது.அப்பர் பெர்த்தில் ஒரு சீப்பு வாழைப்பழமும் ஒரு பாட்டில் தண்ணீரும் இருப்பதைப் பார்த்தது.ஒரே தாவாகத் தாவி அவ்விடம் சென்றது.

நிமிடத்திற்குள் பழம் அனைத்தையும் தின்று தீர்த்தது.தண்ணீரைக் குடித்தது.உண்ட மயக்கத்தில் சுருண்டு படுத்துத் தூங்கிவிட்டது.இதை யாரும் கவனிக்க வில்லை.சட்டென குரங்கு விழித்துக் கொண்ட போது ரயில் மிக வேகமாகச் செல்வதை உணர்ந்தது.அது எக்ஸ்பிரஸ் வண்டி என்பதால் அதிகமாக எங்கும் நிற்காது.நேரம் நடு நிசி இருக்கும்.வண்டியில் இருந்த அத்தைனை பயணிகளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க திடீரென வண்டி மெதுவாக ஊர்ந்து செல்லத் தொடங்கியது.அது ஒரு காட்டுப் பகுதி.அங்கு வண்டி அப்படிச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை.வண்டியின் குறைந்த வேகத்தை பயன்படுத்திக்கொண்டு நாலு பேர் துப்பாக்கி கத்தி சகிதமாய் வண்டியில் ஏறினார்கள்.

குரங்கு இருந்த பெட்டிக்குள் நுழைந்தார்கள்.ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகளைத் தட்டி எழுப்பி சத்தம் போடாதே என்று சொல்வது போல் விரலை வாயில் வைத்து துப்பாக்கியைக் காட்டி அவர்களிடமிருந்து பணம் நகைகள் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டார்கள்.குரங்கு பார்த்துக் கொண்டே இருந்தது.பயணிகளில் இளைங்கனாக இருந்த ஒருவன் கொஞ்சம் எதிர்க்க நெஞ்சில் பிஸ்டலைவைத்துச் சுட்டான் ஒருவன்.அவன் ரத்தம் வழிய இறந்து விழுந்தான்.பார்த்துக்கொண்டே இருந்தது குரங்கு.முடிந்தது வேலை என்று வந்தவர்கலில் மூவர் கிளம்ப ஒருவன் மட்டும் அப்பெட்டியில் இருந்த இளம் பெண்ணைத் தொட விரும்பி மீதம் இருந்தவர்கள் மீது மயக்க மருந்தை ஸ்ப்ரே செய்ய அவர்கள் மயங்கிப் போக கெட்ட எண்ணத்துடன் அவன் அப்பெண்ணை நெருங்க...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

கருத்துக் கதைகள் – 42. இன்னா செய்தாற்கும் இனியவே செய்திடுக.. - தங்கமணி சுவாமினாதன்

படிக்க தவறாதீர்கள்...

 பார்த்துக்கொண்டே இருந்த குரங்கு சரேல் என அவன் மீது பாய்ந்து கழுத்தைக் கட்டிக்கொண்டது.அவனால் ஒன்றும் செய்ய முடியாமல் தடுமாறினான்.கீழே விழுந்த துப்பாக்கியை எடுத்து அப்பெண் அவனின் துடையில் சுட.. ஐயோ எனக்கத்தினான் அந்த கயவன்.சடாரெனத் தாவி அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்தது குரங்கு.அதற்குள் வலிதாங்காமல் திருடன் கத்திய சப்தம் கேட்டு பயணிகள் ஒடிவர ரயிலும் நிற்க நடந்த விபரம் அனைத்தும் போலீஸாரால் அறியப்பட நிதானமாய் வண்டியிலிருந்து இறங்கிய குரங்கு எதிர்த்திசையில் வந்த வண்டியொன்றில் ஏறிக்கொண்டது.

மீண்டும் ஜங்ஷனில் வந்து இறங்கிய குரங்கினை அதன் இரு தோழர்கள் குரங்கும் வரவேற்க ரயில் வண்டியில் தான் கண்ட காட்சிகளைக் கூறி மனிதர்கள் மிகவும் மோசமானவர்கள்....இனி மீண்டும் ஒரு முறை இது போன்ற தீய நிகழ்வுகளைக் காணக் கூடாது எனச் சொல்லித் தன் கண்களை தன் இரு கைகளாலும் பொத்திக்கொண்டது.

நீ சொல்வது மிகவும் சரி...இது போன்ற தீய விஷயங்களை இனி கேட்கக் கூடாது..என்று காதுகளைப் பொத்திக்கொண்டது ஒரு குரங்கு.

நீங்கள் இருவரும் சொல்வது மிகவும் சரியானதே...முதலில் தீய விஷயங்களைப் பற்றிப் பேசவும் கூடாது என்றபடி வாயைப் பொத்திக்கொண்டது மூன்றாவது குரங்கு.

இப்ப புரியுதா பசங்களா மூணு குரங்கும் ஏன் இப்பிடி உட்கார்ந்து இருக்குங்கன்னு...

நன்னா புரியுது டீச்சர்....நாங்குளும் இனி கவனமா இருப்போம் டீச்சர்...

 

கதை சொல்லும் கருத்து:

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்....

கருத்துக்கதைகள் என்ற தலைப்பில் நான் எழுதும் இருபத்தி ஐந்தாவது..(25வது)கதை இது. எனது அனைத்துக் கதைகளையும் அல்லது ஒன்றிரெண்டையோ கூடப் படித்த படித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் அன்பு+நன்றி....நன்றி... 

Story # 43 - Panam pathum seiyum

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.