Chillzee சமையல் குறிப்புகள் - பன்னீர் புலாவ்
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.
இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!
தேவையான பொருட்கள்
பன்னீர்
வெங்காயம்
காய்கறிகள் - பட்டாணி, நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு என நீங்கள் விரும்பும் காய்கறிகள்
பாஸ்மதி அரிசி
இஞ்சி-பூண்டு விழுது
சீரகம்
பிரியாணி இலை
ஏலக்காய்
இலவங்கப்பட்டை
உப்பு
மிளகாய் தூள்
கொத்தமல்லி தூள்
கரம் மசாலா
எண்ணெய்
செய்முறை
அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கவும்.
அதில் பன்னீரைச் சேர்த்து, அவை பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். அவற்றை ஒரு தட்டில் எடுத்து தனியே வைக்கவும்.
இப்போது, அதே கடாயில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் சேர்க்கவும்.
சீரகம், பிரியாணி இலை, ஏலக்காய் மற்றும் ½ அங்குல இலவங்கப்பட்டையை சேர்க்கவும். அவை சில விநாடிகள் சூடாகி சிதறும் வரை காத்திருக்கவும்.
பின், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
இப்போது, வெட்டப்பட்ட வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
உங்கள் விருப்பப்படி, பட்டாணி, நறுக்கிய கேரட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை நீங்கள் சேர்க்கலாம். அவை வெந்து மென்மையாக மாறிய பின், முன்பு வதக்கிய பன்னீரைச் சேர்க்கவும்.
உப்பு, மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் கரம் மசாலா தூவவும்.
இப்போது, அளந்த அரிசி மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
அரிசி புலாவ் பதத்திற்கு வந்த உடன் இறக்கவும்.