தத்துவம்ஸ்...! - அனுஷா
ஒருவன் உங்கள் மீது கல்லைக்கொண்டு எறிந்தால் நீ அவன் மீது பூவை கொண்டு ஏறி
மறுபடியும் கல்லைக்கொண்டு எறிந்தால் பூத் தொட்டியோடு ஏறி…கொய்யால…அவன் மண்டை உடையட்டும்
- சுவாமி கல்லெறி சித்தர்
யாராவது உன்னை லூசுன்னு சொன்னா…கூல் லா இருங்க,
“குரங்கு” அப்படின்னு சொன்ன குமுறாம அமைதிய இருங்க,
கழுதை அப்படின்னு சொன்னா. கதறாம கமுக்கமா இருங்க,…இருங்க ஆனால்
நீங்க ரொம்ப அழகு அப்படின்னு யாராவது சொன்னால்..தூக்கி போட்டு மிதிங்க..
ராஸ்கல்ஸ்…தமாசு எல்லாம் ஓரு லிமிட்டோடதான் இருக்கனும்…
- சுவாமி: தெனாலியானந்தா
நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும் நான் உன் பின்னால் இருப்பேன்…
ஏன் தெரியுமா?
-
அந்த கொடுமையை எவன் முன்னால நின்னு பாக்கிறது …
- கவிக்குயில்: கரடி சித்தர்
புன்னகை என்பது எதிரியை கூட நண்பனாக்கும்…
ஆனால் brush பண்ணாம சிரிச்சால் நண்பனைக் கூட எதிரியாக்கிவிடும்
எனவே….சிரிங்க…நல்லா சிரிங்க
ஆனால்..பல்லை துலக்கிட்டு சிரிங்க…
- சுவாமி:பல்லானந்தா
சுவாமி…இந்த பூமி ஏன் சுற்றுகிறது
மகனே கேள்..ஓரு குவார்ட்டர் தண்ணி அடிச்ச நீயே தலைகிழா நடக்கும் போது…3 குவார்ட்டர் தண்ணியை தன்னகத்தே கொண்டுள்ள இந்த பூமி தினமும் சுற்றுவதில் என்ன அதிசயம் மகனே?
- சுவாமி:குவாட்டரானந்தா
பல் டாக்டரை பார்க்க போனேன் , அங்க லேடி டாக்டர் இருந்தாங்க... திரும்பி வந்துட்டேன்
.
.
ஏன் என்றால் நாம் எந்த பொண்ணுகிட்டயும் பல்லைகாட்டி நிற்க கூடாது பாருங்க...!