கண் தானம்!!!!!!
விடியற்காலை நேரம்,
விடிவெள்ளியின் அழகு!
காலை கதிரவன் கண்சிமிட்டி, தலை நீட்டி
ஒளிரும் அழகு!
ஆனந்தமாய் ஆடிப்பாடி ஆட்டம் போடும்
குளக்கரை குருவியின் அழகு!
தென்றல் வந்து தாலாட்ட மென்மையாய்
அசைந்தாடும் நெற்கதிரின் அழகு!
சிறு சிறு அலைகளாய் தன் ஆரவாரத்தை காட்டும்
ஆற்றங்கரையின் அழகு!
பச்சை பசேலென பரந்து விரிந்திருக்கும்
வயல்வெளியின் அழகு!
என்றும் தன் கம்பீரத்தை பறை சாற்றும்
வான் உயர்ந்த மலையின் அழகு!
மழை சாரலின் ஊடே பல வண்ணங்களில்
தோன்றும் வானவில்லின் அழகு!
மனம் மயக்கும் மல்லிகை கொத்தாய்
செடியினில் சிரிக்கும் அழகு!
காலை நேர கதிரவனின் ஒளியில் தங்க நிறத்தில்
மிளிரும் பனி துளியின் அழகு!
சூரியனை கண்டால் தலை தூக்கி பின் மறைந்தால்
தலை கவிழும் சூரிய காந்தியின் அழகு!
சரம் சரமாய் என்றும் சுறுசுறுப்புடன் இரை தேடும்
எறும்பு கூட்டத்தின் அழகு!
மாலை மங்கும் நேரத்தில் கூட்டமாய் தன் இருப்பிடம்
செல்லும் பறவைகளின் அழகு!
இப்படி ஆயிரம் ஆயிரம் கண் கொள்ளா காட்சிதனை
காண கண் கோடி வேண்டும் அன்றோ!
இறந்த பின்னும் உன் கண் கொண்டு இதை ரசிக்க
இன்றே விரைந்திடு கண்கள் தனை தானம் செய்ய.........