ஒற்றைச் செருப்புடன் ஒரு பயணம்.......
அதிகாலையில்
நெடுஞ்சாலையில்
ஒரு குட்டி ஒற்றைச் செருப்பும்
சில துளி ரத்தமும்..................
தனியே ஓடிச் சிக்கியிருக்குமோ?
அம்மாவுடன் வரும் போதா???
சைக்கிளில் சிக்கியதா?
பைக்கில் சிக்கியதா??
நடந்தது இதுதான்
என மூளை சொன்னாலும்
நடந்தது அதுவாக
இருக்கக்கூடாதென
மனம் கெஞ்சியது
பயணம் முழுவதும்
தினம் கூடவரும்
ஜன்னலோரச் சிலிர்க்
காற்றையும்
மழைச் சாரலையும்
தவிர்த்து........
அன்று
அந்தக் குட்டி
ஒற்றைச் செருப்பு
கூடவே பயணித்தது.....