குயில்
கானக் குயிலே !கானக் குயிலே !
தேனினும் இனிய தீஞ்சுவைக் குரலில்
கீதம் பாடும் இனிய குயிலே !
பூம்பொழில் புகுந்து பூங்கிளை இருப்பாய்
காடுகள் திரிந்து கானம் பாடுவாய்
குக்கூ என்று கூவும் குரலில்
கானம் பாடிடும் கருநிறக் குயிலே !
இனிய குரலோ இயற்கை தந்தது.
குரலின் இனிமைக் குவமை நீயே
இசையினை அளித்தவர் எவரே சொல்லாய்
களிப்பாய்த் திரியும் கானக் குயிலே !
நானும் உனைப்போல் பாடி மகிழ
இனிய குரலை ஈந்திடு வாயே!