(Reading time: 1 minute)

 

குயில் 

 

கானக் குயிலே !கானக் குயிலே !

தேனினும் இனிய தீஞ்சுவைக் குரலில்

கீதம் பாடும் இனிய குயிலே !

பூம்பொழில் புகுந்து பூங்கிளை இருப்பாய்

காடுகள் திரிந்து கானம் பாடுவாய்

குக்கூ என்று கூவும் குரலில்

கானம் பாடிடும் கருநிறக் குயிலே !

இனிய குரலோ இயற்கை தந்தது.

குரலின் இனிமைக் குவமை நீயே

இசையினை அளித்தவர் எவரே சொல்லாய்

களிப்பாய்த் திரியும் கானக் குயிலே !

நானும் உனைப்போல் பாடி மகிழ

இனிய குரலை ஈந்திடு வாயே!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.