நம் நட்பு!
நான் வெள்ளை காகிதமாய் இருந்தால்
அதிலிருக்கும் வண்ண ஓவியம் தான் நீ
நீ சூரியனாய் இருந்தால்
உன்னை நோக்கும் சூரியகாந்தி தான் நான்
நான் சோலைவனமாய் இருந்தால்
அதில் பூக்கும் அழகு மலர்கள் தான் நீ
நீ இயற்கையாய் இருந்தால்
அதை ரசிக்கும் மனம் தான் நான்
இவ்வாறிருக்கும் நம் இருவரின் நட்பு
மேன்மேலும் மலர்ந்து மணம் வீசட்டும்
கடவுளிடம் வேண்டுவோம் நாம்
இனி வரும் ஜென்மங்களி லெல்லாம்
நாம் இருவரும் உறவாயில்லாமல்
அதைவிட உயரிய நட்பில் ஒன்று சேர்வோமென்று