(Reading time: 1 minute)

 

தன்னம்பிக்கை  

 

மாலை  வேளையில் 

மரணம்  நிச்சயித்த  பின்னும்

காலையில்  புன்னகையோடு 

ஜனிக்கும்  பூக்களே

உங்களின்  ஒரு  நாள் 

வாழ்கையில்  கூட 

எத்தனை  விதமாய்

 மகிழ்ச்சியை  கொடுக்கிறாய் 

மங்கையின்  கூந்தலில் 

கோவிலில்  பூஜை  மலராய்

அன்பின்  வடிவமாய்

மலர்கின்ற  போது   மணம்  பரப்பி

ஓ  பூக்களே!

மண்ணில்  வாழும்  தேவதைகளே

மரணத்தை  எதிர்  கொள்ளும்  தன்னம்பிக்கைவாதியே

நானும்  உன்னை  போல்  இருக்கவே  விரும்புகிறேன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.