தன்னம்பிக்கை
மாலை வேளையில்
மரணம் நிச்சயித்த பின்னும்
காலையில் புன்னகையோடு
ஜனிக்கும் பூக்களே
உங்களின் ஒரு நாள்
வாழ்கையில் கூட
எத்தனை விதமாய்
மகிழ்ச்சியை கொடுக்கிறாய்
மங்கையின் கூந்தலில்
கோவிலில் பூஜை மலராய்
அன்பின் வடிவமாய்
மலர்கின்ற போது மணம் பரப்பி
ஓ பூக்களே!
மண்ணில் வாழும் தேவதைகளே
மரணத்தை எதிர் கொள்ளும் தன்னம்பிக்கைவாதியே
நானும் உன்னை போல் இருக்கவே விரும்புகிறேன்…