யாருக்காக - மது
பொன்னிற ஆதவன்
பொலிவாக உதிக்கிறான்
யாருக்காக
இன்னிசை குயில்
இனிய ராகம் பாடுகிறாள்
யாருக்காக
கார்வண்ண முகிலன்
மென் சாரல் தூவுகிறான்
யாருக்காக
தேனூறும் மலர்
மணமாக இதழ் விரிகிறாள்
யாருக்காக
தென்னாட்டு தென்றல்
மென்மையாக வருடிச் செல்கிறான்
யாருக்காக
நியோன் பல்புகளில் உதயம் கண்டு
கைப்பேசி ஹெட்போனில் கீதம் கேட்டு
ஷவரின் உபயத்தில் ஷிவர் செய்து
பெர்ப்யூம் ஸ்ப்ரே வாசம் நுகர்ந்து
ஏசியின் குளுமையில் தும்மல் போட்டு
இவை அத்தனைக்கும் காசும் கொடுத்து
இயற்கை மறுத்து செயற்கையை ஆதரித்து
எல்லாம் தெரிந்த மேதாவி முட்டாள்களாய் வாழும்
நமக்காக...
{kunena_discuss:779}