கவிதை - கண்ட நாள் முதல் - சுதாகர்
நீண்ட நாள் காத்திருப்பு
இன்று மெய்பித்துவிட்டாய்
மென்சாரல் போல் மெதுவாய் வந்து
புயல் மழையாய் என்னை கடந்து செல்கிறாய்
உன்னை கண்ட நாள் முதல்
எத்தனை நாட்கள் உருண்டோடின
உன் பார்வை படும் இடமெல்லாம்
ஓடி நின்றேன்
உன் சிரிப்பிற்காக ஏங்கி நின்றேன்
அவ்வளவு காதலடி
நான் உனக்காக காத்திருப்பதும்
நீ பார்க்காமல் பார்த்து செல்வதும்
நான் கண் ஜாடை காட்டுவதும்
நீ தலையாட்டி செல்வதும் வழக்கமாகிவிட்டது
இப்போதெல்லாம் உன் வருகையை
எதிர் நோக்கி கொண்டு இருக்கிறேன்.
{kunena_discuss:779}