(Reading time: 1 - 2 minutes)

மௌனம் - சுஜாதா ரவிராஜ்

Silence

மௌனத்திற்கு  தான் எத்தனை நிறங்கள்
அதில் தான் எத்தனை வர்ணஜாலம்

ஓவியத்திற்குள் நிறங்கள் போல்
நம்முள் அழகானது மௌனம் !

தாயின் கண்பார்வையில்
அடங்கும் பெண்களின் குணம்
அதுவே நம் கலாச்சாரத்தின் மௌனம்..

காதலியின் மௌனம் அதை
வார்த்தைகளின்றி உணரும் காதலன்
அதுவே தித்திக்கும் மௌனம் ..

கணவனின் கைகளில் மட்டும் அடங்கும்
பெண்ணவள் உதிர்க்கும் மௌனம்
அதுவே மென்மையின் மௌனம் ..

பல வர்ணங்கள் கொண்ட
கனவுகள் வருவது நித்திரையில்
அதுவே இமைகளுக்குள் மௌனம் ..

கொள்ளையே அடித்தாலும்
கோடிகளே கிடைத்தாலும்
 நிமிட நேரம் கண்கள் உணறும் மௌனம்
அதுவே வெற்றியின் மௌனம் ..

விளைவுகள் பல உருவாக்கும்
கோபத்தை தடுக்கும் மௌனம்
அதுவே விவேகமான மௌனம் ..

தனிமையில் என்றும்  துணை இருக்கும்
அதுவே அழகிய நட்பின்  மௌனம் ..

இறைவன்  சந்நிதியில் நம்
மனம் கொள்வது
நிம்மதியின் மௌனம்

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.