முதல் முத்தம் - சஹானி
என்னையே சுற்றி வந்தாயடா...
என்னைக் கட்டி கொண்டாயடா...
இவ்வுலகே உன்னால்தான் என்றாயே ...
இன்று என்னை விட்டு வெகுதூரம் சென்றாயே...
எவளோ ஒரு பெண் ஏற்றினாள் உன் வாழ்வில் தீ பம்
எனக்கோ நிதமும் மர ணம்
எனக்கென யாருமின்றி ஆனேன் தனி மரம்
என்னை போன்றே பலர் உண்டு இவ்வுலகில்
அது நாங்கள் பெற்று வந்த சாபம்
கண்களில் கண்ணீர் கோடுகள்
கன்னங்களில் அழியாத உன் சுவடு கள்
"அம்மா" வென்றழைத்து நீ கொடுத்த
"முதல் முத்தம்"
(பிள்ளைகளால் முதியோர் இல்லத்தில் தள்ளப்பட்ட ஒரு தாயின் நிலையை கருவாக கொண்டு எழுதியுள்ளேன். பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். தங்கள் கருத்துக்களையும் அறிவுரைகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி...)