(Reading time: 1 - 2 minutes)

தாய்மையின் பலம் - சஹானி

பெற்று விட்டாள் முதுகலை பட்டத்திற்கும் மேலானதொரு பட்டத்தை...

கட்டிய கணவனும் அறியாது இரவில் அவள் வடித்த கண்ணீருக்கு இன்று தக்க பரிசை பெற்று விட்டாள்...

கங்கை நீராய் அவள் சிந்திய நீர் துளிகள் இன்று கானல்  நீரானதே...

இரக்கமே இன்றி சொல்லில் விஷம் தோய்த்து  அவள் மனதை காயப்படுத்திய இச்சமூகதத்திற்கு தக்க பதிலடி கொடுத்து விட்டாள்...

பெண்ணுக்கே உரிய தாய்மை நிலையை அடைந்து விட்டாள்...

தன் மகளும்  தாயாக போகிறாள் என்ற சந்தோஷத்தில் அவளின் தாய்-தந்தை

தன் மகன் குலம் தளைக்கவிருக்கும் பூரிப்பில் அவனின் தாய்-தந்தை

அவர்களிருவரின் அன்பிற்கான பொக்கிஷம் இந்த குழந்தைச் செல்வம்

அவர்களை நாமும் வாழ்த்துவோம்  
 
{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.