அவளின் டைரியில் - மீரா ராம்
31. எப்படி முதல் காதலின் சுவடு என்னுள் இருக்கும்???
கானல் நீராய் மட்டுமே நீ இருந்தாய்…
இரு இணையாத தண்டவாளமாய் மட்டுமே நாம்…
தான் காதலித்தவனை கைப்பிடிப்பவள் அதிர்ஷ்டசாலி…
ஆனால் தன்னை காதலிப்பவனை கைப்பிடிப்பவள்
பாக்கியாசாலி… ஆம்…
நான் அதிர்ஷ்டசாலியாய் இருப்பதை விட
பாக்கியசாலியாக இருக்க விரும்புகிறேன்…
என் காதல் தோற்கவில்லை…
அது மடிந்து விட்டது…
என்று நீ என்னைப் புறக்கணித்தாயோ….
அன்றே என் காதல் செத்துவிட்டது…
இதுநாள் வரை அது உயிரோடிருக்கிறதென நம்பி
பிணமான என் காதலுடன் வாழ்வு மேற்கொண்டிருந்தேன்…
இனியும் அந்த நிலை நீடிக்காது என
என்னை மீட்டு வெளியில் இழுத்து வந்திருக்கிறார் கடவுள்…
என் மனதின் பக்கத்திலிருந்து உன்னை
எடுத்துவிட்டேன் முற்றிலுமாய்…
முதல் காதல் மறையாதென சொல்லுவார்கள்…
அது உண்மை தான்…
காதல் மறையாது தான்…
ஆனால் மறைக்கப்பட்டால்???
என்னை விரும்புபவன் அதை வேரோடு இருந்த
சுவடு தெரியாமல் எடுத்துவிட்டால்???
எப்படி முதல் காதலின் சுவடு என்னுள் இருக்கும்???
{kunena_discuss:784}