நீயே தான்… – மீரா ராம்
என் நேசத்தின் அடங்காத தாகம் நீ…
என் சுவாசத்தில் நுழையும் காற்று நீ…
என் செவிகளின் நீங்காத ரீங்காரம் நீ….
என் இதழ்களின் ஓயாத உச்சரிப்பு நீ….
என் கனவில் காணும் நாயகன் நீ…
என் நனவின் உருவமில்லா காட்சியும் நீ…
என் தேகத்தின் மென் தீண்டலும் நீ….
என் மோகத்தின் சுடர் தூண்டலும் நீ…
என் உள்ளத்தின் வலிய திறவுகோல் நீ…
என் இமைகளின் வலிக்காத தழுவல் நீ…
என் பகலின் பிரகாச வெளிச்சம் நீ….
என் இரவின் நடுங்கும் இருள் நீ…
என் புன்னகையின் கன்னி வடிவம் நீ…
என் கண்ணீரின் அழகிய நிறம் நீ….
என் இதயத்தில் ஒலிக்கும் கூக்குரல் நீ…
என் நாணத்தில் துடிக்கும் பெண்மையும் நீ…
என் நினைவில் கலந்த சங்கமம் நீ…
என் உறவில் நிறைந்த வரவும் நீ….
என் விழிகளின் கலைந்திடாத உறக்கம் நீ…
என் கால்களின் இடைவிடாத பயணம் நீ…
என் தூரிகையின் அழகான ஓவியம் நீ…
என் காதலின் படைப்பான காவியம் நீ….
என் கதையில் வீற்றிருக்கும் ஜீவன் நீ….
என் கவிதையில் மறைந்திருக்கும் அர்த்தமும் நீ…
என் நெஞ்சுக்குழியின் ஆழப் புதையல் நீ…
என் தொண்டைக்குழியில் சிக்கிய வார்த்தை நீ…
என் மனதின் மழைத் தூரல் நீ…
என் மலரின் மயக்கும் வாசமும் நீ…
என் அடிமனதில் குடிகொண்ட தூபம் நீ….
என் பெண்ணாசையின் வற்றிடாத தாபம் நீ…
என் வாழ்வின் ஆச்சரியம் சிறுவயது நீ….
என் அனுமானத்தில் எட்டிடாத நிஜத்தோற்றம் நீ….
என் செல்போனின் வரவேற்பு குழந்தை நீ…
என் கன்னங்களின் செந்நிற கதப்பும் நீ…
என் ஆசையில் நிறைவேறிய நேற்றிரவு நீ….
என் நெஞ்சத்தின் உற்சாக புகைப்படம் நீ….
என் கண்களில் கண்டும் மறந்துவிட்ட முன்னாள் உருவம் நீ…
என் கண் இமைகளில் கண்ட ஆடாத இன்னாள் பிம்பமும் நீ….
எனதனைத்தும் நீயே தான்…
நீ இந்த பாவையின் உயிர் மட்டுமல்ல…
இனி இவள் பார்வையின் உயிரும் நீயே தான்…
{kunena_discuss:779}